லண்டனிற்கு படிக்க சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மீண்டும் இந்தியா திரும்பியதும் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழக பாஜக தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர வாய்ப்பாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியமான ஏற்பாட்டில் களமிறங்கியுள்ளது. இதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் டூல் பல்வேறு விதங்களில் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பிறந்து எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன,மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன் தான் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். தொல் திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும், என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு திராவிட இயக்க படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (06209) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தி மின்சாரத்தை ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ தொழில்நுட்பத்தில் சேமித்து வைத்து இரவில் வழங்குமாறு மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் தமிழக மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ள தூத்துக்குடி நடுவன் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநரைக் கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாரளிப்பதை தவிர்த்து சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்து வருகின்றன.
வேலூர் சிறை டிஐஜி வீட்டில் திருடியதாக கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பெண் டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, மேலும் மூவரை என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் இன்று (அக்.21) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
பா.ஜ.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த மூத்த தலைவர் தடா பெரியசாமி, நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க-வில் முக்கிய பதவிகளை அளித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அறிவித்தார்.
தரமான கல்வி கிடைக்க அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்
திருநெல்வேலி நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பமாக, மாணவர்கள் தரப்பிலிருந்து புகார்கள் ஏதும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்து மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனிடம் பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.
நடிகை கவுதமி அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த நடிகை கவுதமி கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார்.
மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இர்பான், மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?. தவெக மாநாட்டுக்கு கர்ப்பிணிகள், வயதானவர்கள் வர வேண்டாம் என கூறியது அக்கறையில் சொன்னது, அதை வரவேற்கிறேன். விஜய்க்கு என் பாராட்டுக்கள் என கரூரில் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு கான அனைத்து தொழிற்சங்களின் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.