“எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption)ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கட்டுமர மீனவர்களுக்கு நெத்திலி ரக மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடிதடைக் காலம் அமலில் உள்ளது. இதனால், சின்னமுட்டம் துறைமுக விசைப்படகு மீனவர்கள்
“மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்து அந்தப் படத்தை தானே தயாரிக்கவும் செய்துள்ளார். ‘காதல் தி கோர்’ போன்ற ஒரு படத்தில் நம்முடைய பாலிவுட் ‘கான்’கள் நடிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை” என நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயத்தை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஜூன் 4 ஆம் தேதிக்குப் பின்னரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப் பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்வே துறை சார்பில் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது வழித் தடத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. தொலைவுக்கு நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 6 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன
சாந்தோம் நெடுஞ்சாலையில் ரஷ்யா நாட்டுக்கான தூதரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மேல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ட்ரோன் ஒன்று வட்டமடித்தது. இதைக்கண்டு ரஷ்யத் தூதரக அலுவலக பாதுகாப்புப் பணி
இந்திய தேர்தல் களத்தில் காரசார விவாதப் பொருளாகியுள்ளது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சொத்துகள் மறுபங்கீடு தொடர்பான வாக்குறுதியும் அதன் மீதான பிரதமர் மோடியின் விமர்சனமும்.
விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். புதன்கிழமை நடந்த விசாரணையின்போது விவிபாட் குறித்த சந்தேங்களை நீதிபதிகள் எழுப்பினர். அவற்றுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
லாப நோக்கற்ற அமைப்பான ஊடக ஆய்வு மையம், கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுவரும் தேர்தல்களுக்கான செலவினங்களை மதிப்பீடு செய்து வருகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான செலவினம் குறித்த மதிப்பீட்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மதரீதியிலான இடஒதுக்கீட்டுக்காக பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை திருடகாங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் நேற்று பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்எஸ். ஷர்மிளா விஜயவாடாவில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கொளுத்தும் வெயிலுக்கு இடையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீர் விற்பனையும் களைகட்டியுள்ளது. அதேபோன்று, பீரை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதும் அதிகரித்து வருகிறது.
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி கைநழுவி போய்விட்டதை பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிந்துள்ளார். இது அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது:
ஆந்திர மாநிலத்தில் நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. இதில் 175 சட்டப்பேரவைக்கு மொத்தம் 4,210 வேட்பாளர்களும், 25 மக்களவை தொகுதிகளுக்கு 731 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்விரோதமே காரணம் என்றும் கொலைக்கு காரணமானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மக்களவை தேர்தலின் போது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 134-வது வார்டின், 13-வது வாக்குச் சாவடியில், முகவராக இருந்த பாஜக நிர்வாகி கவுதமனை, திமுகவினர் தாக்கியதாக தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றஞ்சாட்டியிருந்தார்
பத்திரப்பதிவு எண்ணிக்கை, வருவாய், தொலைவு அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகங்களை இணைத்தல், பிரித்தல் உள்ளிட்ட சீரமைப்புக்கான அடிப்படை பணிகளை பதிவுத்துறை தொடங்கியது
நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு காரணமாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 5 பேர் பாதிக்கப்பட்டனர்
“கடந்த 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி இறந்த பின்னர் தனது பரம்பரைச் சொத்துகள் யாவும் அரசுக்குச் செல்லாமல் இருக்கவே, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பரம்பரை சொத்து வரியை ரத்து செய்தார்” என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், காங்கிரஸ் தற்போது பரம்பரை சொத்து வரியை திரும்பக் கொண்டுவர முயற்சிக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி மீது புகார் வந்ததையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 25,753 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தகுதி இல்லாத பலர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுகவினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்றும், தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரேஷன் அரிசிக் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.