தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் சிறைக் கதவுகளால் பிரிந்து விடுவதில்லை என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆயுள் தண்டனை கைதிக்கு 40 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் தொடர்ந்து 16 ஆண்டுகளாகவும், தேசிய அளவிலான போட்டியில் தொடர்ந்து 6 ஆண்டுகளாகவும் வாகை சூடி வருகின்றனர் மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முதல் மசோதாவாக 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு (நாரிசக்தி வந்தன் பில்) நேற்று அறிமுகமாகி உள்ளது. இதன் பலன் பாஜகவுக்கு கிடைக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கான உபகரணங்கள் ராட்சத லாரிகளில் கொண்டு செல்லப்பட்டதையொட்டி வி.எம். சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களை தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை ஊர்வலம் எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னையில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்திற்கு நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில் காவிரி படுகை உழவர்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் துரித ரயில் செப்., 24 முதல் இயக்கப்படுகிறது. இதற்கான ஒத்திகை ரயில் நேற்று மதியம் 1.30 மணிக்கு மதுரை ரயில் வந்தடைந்தது. இதன்பின், நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றது.
சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர பிரதேச சட்டப்பேரவையில் நடந்த கூச்சல் குழப்பத்தின்போது நடிகரும் எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி, மீசையை முறுக்கி ஆரவாரம் செய்தார். அவரின் இந்த செயலை சபாநாயகர் கண்டித்து எச்சரித்தார்.
"அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு தலைவராக இருக்கிறேன்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை மாநகரை ஆண்டுதோறும் டெங்கு கொசுக்கள் மிரட்டி வருகின்றன. நல்ல நீரில் முட்டையிட்டு வளரும் ஏடிஸ் ஈஜிப்டி (Aedes Aegypti) வகை கொசுக்களே டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸை பரப்புகின்றன.
முதல்வரையும், தமிழக அரசையும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தருமபுரி மாவட்ட திமுக செயலாளர்கள் இன்று (செப்டம்பர் 21-ம் தேதி) எஸ்.பி-யிடம் புகார் மனு
காரைக்குடி ரயில் நிலையம் முக்கியச் சந்திப்பாக உள்ளது. இங்கு 5 நடைமேடைகள் உள்ளன. வாராந்திர ரயில்கள் உட்பட 26 ரயில்கள் நின்று செல்கின்றன. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி, வேளச்சேரி மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் சோனியா காந்தி இன்று (செப்.19) தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாக காங்கிரஸ் திங்கள் கிழமை தெரிவித்தது.
அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீட் தேர்வை ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு, தற்போது ஒரு கோடி கையெழுத்து கேட்கும் நாடகத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப் காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்
நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விண்கலன்கள் விரைவில் விழித்தெழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணியில் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை கணிக்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
புதுச்சேரி கடன் ரூ. 12,595 கோடியாக அதிகரித்துள்ளது. தற்காலிக பணமாக பெறப்பட்டு ரூ. 130 கோடியை பல துறைகளில் திருப்பி செலுத்தவில்லை என்று இந்திய தணிக்கைத் துறைத் தலைவரின் தணிக்கை
திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சிமாவட்ட எல்லையையொட்டிஉள்ள சேலம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை என மொத்தம் 1,250 விநாயகர் சிலைகள்