புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த புதிய விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள், வருடா...
பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர்களின் சம்பளம்
இதனடிப்படையில், பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களுக்கான நாளாந்த மொத்த கொடுப்பனவு 1700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
கொட்டகலை VC மைதானத்தில் இடம்பெறவுள்ள மேதின நிகழ்விற்கு அதிபர் வரவுள்ள நிலையில் மைதானம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெருந்திரளான காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பாதுகாப்பு பலப்படுத்தப்படல்
வழக்கமாக கொட்டகலை நகரின் வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான வாகனங்கள் நிறுத்தப்படும் போதும் தற்போது அதற்கான அனுமதி மறுக்கப்பட...
அருணாச்சல பிரதேச எல்லைகளில் சீனா அதிக அளவு படைகளை குவித்துள்ள நிலையில் இந்தியாவானது அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட அதி சக்திவாய்ந்த ரேம்பேஜ் என்ற ஏவுகணையை தனது விமானப்படைகளிலும் கடற்படைகளிலும் இந்தியா இணைத்துள்ளது.வேகம்
குறித்த ஏவுகணையானது, 250 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இலக்கை கூட துல்லியமாக தாக்கக் கூடிய திறன் கொண்டது.
அத்தோடு, இது ஒலியை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் பயணித்து இலக...
உக்ரைனுக்கு நீண்ட கால இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த இராணுவ ஆயுத உதவியானது ஆறு பில்லியன் டொலர் பெறுமதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் நேறையதினம்(26) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஆயுத உதவி
இதனடிப்படையில் இந்த நடவடிக்கையானது உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளில் மிகவும் அதிக தொகைக்கு வழங்கப்படும் உதவியென அமெரிக்கா தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வெயிலின் தாக்கம்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை வ...
இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க ஆய்வுக் கப்பல் ஒன்று விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்கரைக்குள் நுழைவதற்கு அனுமதி
அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன் சம்பந்தப்பட்ட கப்பல் எரிபொருள், தண்ணீர் மற்றும் உணவு மற்றும் குடிநீர் வசதிகளை பெறுவதற்காக இல...
அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் குஜராத் மாநிலம், அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதா பென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.அதிக வேகம்அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள காரில் குறித்த மூவரும் சென்றுக் கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இஸ்ரேலின் சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவை பெற்றதாகவும் அதற்கு பதிலைச் சமர்ப்பிப்பதற்கு முன் அதை ஆய்வு செய்து வருவதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.தரைவழித் தாக்குதல்
காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தரைவழித் தாக்குதல் நடத்தியது போல் தற்போது தெ...
வியட்நாம் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வூங் டின் ஹியூ இன்று (27) பதவி விலகியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு, தாமாகவே குறித்த பதவியில் இருந்து விலக வூங் டின் ஹியூ தீர்மானித்துள்ளார். 67 வயதுடைய வியட்நாம் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவி விலகியுள்ளமை அந்த நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி விலகல்வியட்நாம் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வூங் டின் ஹியூ ம...
இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.நாடுகள்
அதன்படி, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம், பூட்டான், பஹ்ரைன், மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்தோடு, குறித்த நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிகளை எளிதாக்குவதற்கு பொறுப்பாக தேசிய கூட்...
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறான மருந்துப் பொருட்களினால் பாரிய சுகாதார கேடுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த மாத்திரைகள் உண்மையான மாத்திரைகள் போன்று பொதியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. போலி மருந்து மாத்திரைகள் இதன்படி,காலாவதியாகும் திகதி பற்றிய விபரங்கள் வழமைக்கு மாறான அடிப்படையில் காணப்படுவதாகவும்...
சில வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் இலங்கைக் கிளை வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.
அதன்படி, பேருந்துகள் மற்றும் வான்கள் விற்பனை குறித்து வார இறுதி நாளிதழ்களில் அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.ஆரம்ப விலை
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் வான்களை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
<...
உக்ரைன் நாட்டின் மீது சனிக்கிழமை இரவில் ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரங்களை குறிவைத்து 30இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது அவற்றில் சுமார் 20 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழித்ததாகவும் உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.4 அனல்மின் நிலையங்கள் சேதம்
தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டகர்ப்பிணியான தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.
சப்ரீன் அல் சகானி என்ற அந்த பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ரபா மருத்துவமனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை மூலம் மீட்கப்பட்டது.கடும் போராட்டம் கடும் போராட்டத்திற்கு பின்னரே மருத்துவர்களால் அந்த குழந்தை உயிருடன் காப்பாற்றப்பட்டது.1.4 கிலோகிராம் மட்டுமே எடைகொண்ட குழந்தை, அவசரசிகிச்சைபிரிவில் வைக்கப்பட்டு மருத...
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலிற்கும் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் கடந்த ஒக்டோபர் 7ம் திகதியன்று திடீர் தாக்குதலை முன்னெடுத்த நிலையில், நாட்டின் வடக்கில் இருந்து இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் முழு அளவிலான போர் வெடிக்கும் என்பதில் இனி எந்த சந்தேகமும் இல்லை என்றே இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.பிராந்திய மோதல்
ஆர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் இந்த ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அறுபது வயதான மரிசா ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
முதன்முறையாக 60 வயது பெண் ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் என்ற வரலாற்றில் மரிசா இடம்பிடித்துள்ளார்.பத்திரிகையாளர் மற்றும் தொழில் ரீதியாக வழக்கறிஞர்.
புவெனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவில் வசிப்பவர், மரிசா ஒரு பத்திரிகையாளர் மற்றும் தொழில் ரீதியாக வழக்கறிஞர்.மாகாணத்தை ப...
செங்கடலில் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய அதேவேளை யேமன் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹவுத்தி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.ஏமன் நகரான மோச்சாவில் இருந்து தென்மேற்கே சுமார் 15 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.சம்பவம் குறித்து விசாரணை
பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான யுகேஎம்டிஓ, பனாமா கொடியுடன் கூடிய கப்பல் இரண்டு முறை தாக்கப்பட்டு சேதம் அடைந்ததாக தெரிவித்துள்ளது.இந்த தாக்கு...
தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அதிபர் ஜோ பைடன் கூறியது அமெரிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முக்கிய விடயங்களை அண்மையில் அவர் கலந்துகொண்ட பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.வாழ்க்கையில் மோசமான ஆண்டு
1972 ஆம் ஆண்டு தனது வாழ்க்கையில் மோசமான ஆண்டு என தெரிவித்த அவர், தனது 30 ஆவது வயதில் மனைவி மற்றும் மகளை கார் விபத்தில...
கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியானது பக்கவிளைவை ஏற்படுத்துவதாக அதன் நிறுவனமான இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா (Corona) வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்த நிலையில் இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா (AstraZeneca) நிறுவனம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (University of Oxford) இணைந்து தடுப்பூசியை உ...
கனடாவில் நோரோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு பொதுச் சுகாதார அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அத்துடன், இந்த நோய் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட விசேட சிகிச்சை முறைமைகள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் கடந்த ஐந்து ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் நோரோ வைரஸ் தாக்கத்தின் பாதிப்பு அதிகமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஒன...
காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த செயற்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினரிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) நேற்று (29) கோரிக்கை விடுத்துள்ளார்.
காசா விவகாரம் தொடா்பாக மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், சவுதி அரேபிய தலைநகா் ரியாதில் செய்தியாளா்களிட...
கொலம்பியாவில் இராணுவ உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதில் ஒன்பது வீரர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோரா நகராட்சியில் முகாமிட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்கள் விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொருட்களை இறக்கிவிட்டு புறப்பட்ட உலங்குவானூர்தி, சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியுள்ளதுடன் இதில் இருந்த ஒன்பது வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இந்திய - மாலைதீவு உறவில் விரிசல்கள் விழுந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் மாலைதீவு, சீனாவின் உளவு கப்பலுக்கு (Xiang Yang Hong 03) அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் மாலைதீவு மற்றும் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா உற்று கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவின் புதிய அதிபராக முகம்மது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது.சீனாவுடன் அதீத நெருக்கம்
அத்தோடு, முகம்மது முய்சு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர...
கனடாவிற்கு கல்வி கற்பதற்காக வருகை தரும் மாணவர்களின் பணத்தேவைகளுக்காக வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கனடாவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால் அவர்களது நோக்கமே பணி செய்வதற்காக மாறியுள்ளதாக அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.கட்டுப்பாடு
கனடாவில் கொரோனா பெருந்தொற்றின் போது பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையால் அதனை சமாளிப்பதற்காக மாணவர்களை மேலதிக...
கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த செயல் இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளதுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளது.டெல்லியில் உள்ள கனடா துணை தூதுவரை
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான கனடா துணை தூதுவரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு...
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் நடந்த வீட்டு முற்றுகையில் மூன்று காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்,மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
மூன்று மணி நேரம் நீடித்த மோதலுக்குப் பிறகு, வீட்டின் முன் முற்றத்தில் குறைந்தது ஒரு சந்தேகத்திற்கிடமான தாக்குதலாளி இறந்து கிடந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.காயமடைந்த அதிகாரிகள்
துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இருவர் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த அதிகாரிகள் அமெரிக்க மார்ஷல்ஸ் சேவை தல...
தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு ஹெலியில் சென்ற இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மயிரிழையில் உயர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பீகாரில் தீவிர பிரசாரம்
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் கட்சிகளிடையே தீவிர பிரசாரம் களை கட்டியுள்ளது.
அந்த வகையில் பீகாரில் உள்ள பெகுசராய் பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பா...
கனடாவில் கடல் யானை ஒன்று பாதுகாப்பாக வீதியை கடப்பதற்காக காவல்துறையினர் வீதியை மூடியுள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பியாவின் ஓக்பே பகுதியில் உள்ள வீதியே இவ்வாறு காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.இதன்போது, கடல் யானை பாதுகாப்பாக தரையிலிருந்து நீர்நிலையை சென்றடைவதற்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீதிப் போக்குவரத்து நடவடிக்கைகள்கடல் யானை விபத்தில் சிக்கக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் வீதிப் போக்குவரத்தை இரத்து செய்திருந்தனர்....
உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மைக்கு தொடர்பாடல்களுக்கான ஊடகங்கள் தொடர்ந்தும் திறந்த நிலையில் இருக்க வேண்டியது அத்தியாவசியமானது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அபிவிருத்திக்கான உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் எனும் தலைப்பில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் நேற்றும் இன்றும் நடைபெற்றது....