கொழும்பு: இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, அந்நாட்டு ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’ என்ற செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் உளவுக் கப்பலை இந்த துறைமுகத்தில் நிறுத்தி சில பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக அம்பந்தோட்டாவுக்கு 11ம் தேதி வரும் கப்பல், 17ம் தேதி வரை அங்கேயே முகாமிட்டு செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளை மேற்கொள்ளும
ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் பாலஸ்தீன நாட்டின் இஸ்லாமிக் ஜிகாத் (ஐஜே) என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஐஜே, ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் இணை
புதுடெல்லி: ஒன்றிய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வான கியூட் தேர்வு எழுத நாடு முழுவதும் 14.9 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த 4ம் தேதி, 17 மாநிலங்களைச் சேர்ந்த 489 மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நிமிடத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதே போல, நேற்று முன்தினம் நடந்த கியூட் தேர்விலும் இதே பிரச்னை காரணமாக 53 மையங்களில் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்நிலையில், இ
புதுடெல்லி: டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய அதிரடி சோதனையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய நபர் கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு அமைப்பினர் கர்நாடகா, மபி., உபி., உள்பட 6 மாநிலங்களில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்துக்குள்ளான நபர்களின் 13 இடங்களில் கடந்த 31ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியின் பாட்லா ஹவுஸ் பகுதியில்
புதுடெல்லி: ஒன்றிய அரசின் முதன்மையான ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சிஎஸ்ஐஆரின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சிஎஸ்ஐஆர் நாடு முழுவதும் 38 ஆய்வக
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வாரங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மூணாறு அருகே கண்டலா புதுக்குடி பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 கடைகள், ஒரு கோயில் மற்றும் ஒரு ஆட்டோ மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகே தமிழக தோட்ட தொழிலாளர்கள் சுமார் 175 குடும்பத்தை சேர்ந்த 450க்கும்
புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த இந்திய பெண் மந்தீப் கவுர் (30) என்பவர், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஆறு மற்றும் நான்கு வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மந்தீப் கவுர் ெவளியிட்ட வீடியோ பதிவில், ‘ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். திருமணமாகி 8 ஆண்ட
புதுடெல்லி: விலைவாசி உயர்வு குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ஆங்கில பத்திரிகையில் விலைவாசி உயர்வு பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் இன்னும் பதில் கூறவில்லை. நிகழ்காலத்தை பற்றி பேசுவதை விட வரலாற்றை ஆய்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுபவராக உள்ளார்
அயோத்தி: அயோத்தியில் சட்டவிரோத நில விற்பனையில் நகர மேயர், முன்னாள், இந்நாள் பாஜ எம்எல்ஏ.க்கள் உள்பட 40 பேருக்கு தொடர்பு இருப்பதாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதையொட்டி, அங்கு நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி பாஜ பிரமுகர்கள் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்று பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக எதிர்க்கட
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், ஒரே நாளில் 4.04 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் வார விடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இரு
திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக இருசக்கர வாகன ஓட்டுநர்கள் ஹெல்மெட்டில் கேமரா வைத்து சாகசத்தில் ஈடுபடுகின்றனர். அதிவேகமாக பைக்கில் சென்று அதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வந்தது. இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட்டில் கேமரா வைக்க மோட்டார் வாகனத்துறை தடை விதித்து
திருவனந்தபுரம்: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் கூடிய ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் முறைப்படி அடுத்த மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்நிலையில், அந்த கப்பலை மோகன்லால் நேரில் சென்று பார்வையிட்டார். இதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு வந்த மோகன்லாலை கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தள அதிகாரி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் சஜீத் (54). வெப் தொடர்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் மலையாள சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். கள, கனகம் காமினி கலகம், ஜானே மன் உள்பட பல படங்களில் நடித்து உள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு த
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காலையில் ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டு வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றபட்டது. தொடர் மழையால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாக உயர்த்தப்பட்டத
டெல்லி: சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்யுமாறு நாட்டின் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், இதர வேளாண் பொருள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார
புக்கரெஸ்ட்: சென்னையை சேர்ந்த 16 வயது பிரணவ் வெங்கடேஷ், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார். ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வென்று, கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றார். இந்தியாவிலேயே அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளத
ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று காலை 9.18 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. புவி கண்காணிப்பிற்கு இஒஎஸ்-02 என்ற செயற்கை கோள் மற்றும் கிராமப்புற மாணவிகள் உருவாக்கிய அசாதி சாட்
காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றது. இந்திய வீரர்கள் எல்தோஸ் பால் 17.03 மீ., அப்துல்லா அபுபக்கர் 17.02 மீ. தூரம் கடந்த முறையே தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கம் உட்பட 45 பதக்கங்கள் கிடைத்துள்
காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் நடை போட்டியில் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 10,000 மீட்டர் நடை போட்டியில் 38:42.33 நிமிடங்களில் இலக்கை கடந்து 3-வது இடத்தை சந்தீப் பிடித்துள்ளா
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியில் இருந்து 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. 23,000 கன அடி நீர் நீர்மின் நிலையம் வழியாகவும், 1.07 லட்சம் கன அடி நீர் 16 மதகு வழியாக வெளியேற்றப்படுகிற
காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்றார். மகளிர் பிரிவில் 60 மீட்டர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி வெண்கலம் வென்றுள்ளார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கமும் உட்பட 47 பதக்கங்கள் கிடைத்துள்
காமன்வெல்த்: இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியானது. ஆடவருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், லக் ஷயா சென் மோத உள்ளனர். பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ள
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் ஏழாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் ெடல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் இன்று நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின்&n
காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா, பெனான்ல்டி ஷுட் அவுட்டில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்கள் கிடைத்துள்
காமன்வெல்த்: காமன்வெல்த் போட்டி மகளிர் குத்துச் சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நித்து தங்கம் வென்றார். இங்கிலாந்து வீராங்கனை ஜேட் ரெஸ்ட்டானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி நித்து கங்காஸ் வெற்றி பெற்றா
சென்னை: சென்னை கத்திபாரா அருகே சாலை வழிகாட்டி பலகை கீழே விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது வழிகாட்டி பலகை விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. வழிகாட்டி பலகை விழுந்ததில் அந்த வழியாக வந்த அரசு மாநகர பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தத
ஈரோடு: கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க மருத்துவ அதிகாரிகள் வந்துள்ளனர். மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி, துணை இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தன
புதுடெல்லி: டெல்லியில் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் 72 பேரின் ஆவணங்களில் குளறுபடிகள் உள்ளதால், அவர்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி அரசின் கல்வித் துறையில் கடந்தாண்டு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் பயோமெட்ரிக் விபரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவர்கள் பணியில் சேரும் போது தங்களின் புகைப்படங்கள் மற்றும் பயோமெட்ரிக் சான்றுகளை அளித்திருந
புதுடெல்லி: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்) நாடு முழுவதும் 38 ஆய்வகங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். விண்வெளி, கட்டமைப்பு, கடல் அறிவியல், உயிரி அறிவியல்,