மாஸ்கோ : ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத மையத்தை நிறுவ முடிவு செய்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவல் தடைச் ச
திருவனந்தபுரம் : மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் பல்வேறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னசென்ட். தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்பி, பாடகர், தயாரிப்பாளர் என் பன்முக திறமை கொண்ட இன்னசென்
துனிசியா : துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகள் 28 பேர் பலியாகினர்.படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 அகதிகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர
வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்களின் கோவிலிலான குருத்துவாராவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் காரணம் இல்லை என செக்ராமென்ட்டோ காவல்துறை தெரிவித்துள்ளத
திருச்சி : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான திருச்சி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மணப்பாறை அருகே அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த வில்சன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார
சென்னை : சேப்பாக்கத்தில் ஏப்ரல் 3ம் தேதி நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ இடையிலான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் வாங்க நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத
கொல்கத்தா : 2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இல்லம், ரவீந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதன் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறா
சென்னை :தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளத
திருவனந்தபுரம் : புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னசென்ட் காலமானார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சுவாச கோளாறு காரணமாக மார்ச் 3 முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தத
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.26 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,826,769 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,301,879 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,237,525 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,078 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன
தலின்(எஸ்தோனியா): உக்ரைனில் போரிட ராணுவத்தில் சேரும்படி கவர்ச்சிகர அறிவிப்புடன் ஆண்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன், ரஷ்யா போர் ஓராண்டை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்து விட்டனர். தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் தரை மட்டமாகி விட்டன. உக்ரைனின் பதிலடி தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்களும் பலியாகி
வாஷிங்டன்: வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் மீது பஞ்சாப் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து,கடந்த 22-ம்தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இந்திய தூதரக அலுவலகத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்றி உள்ளனர். இத
காத்மாண்டு: ஏர் இந்தியா மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. விமானிகளின் சாதுர்யத்தால் விமானங்கள் நேருக்குநேர் மோதுவது தவிர்க்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில், கோலாலம்பூரில் இருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று காத்மாண்டு நோக்கி வந்தது. அதே நேரத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 19 ஆயிரம் அடி உயர
புதுடெல்லி: ராகுல் காந்தியை மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். டெல்லி ராஜ்காட்டில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். குஜராத்தில் போராட வந்த காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகா
போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் 15 ஆண்டுகால ஆட்சியை அகற்றி விட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் காங்கி
புதுடெல்லி: 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் 2023-24ம் ஆண்டுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கான ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2022-23
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,890 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்ட
பிதார்: ஐதராபாத் விடுதலைக்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் மறந்து விட்டது என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் கோரட்டா கிராமத்தில் ஐதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவிடம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தை திறந்து வைத்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘ கடந்த 1948ம் ஆண்டு மே 9ம் தேத
புதுடெல்லி: ‘சவுராஷ்டிரா மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேயான ஆயிரம் ஆண்டு கால உறவை மீட்டெடுக்கும் வகையில் குஜராத்தில் அடுத்த மாதம் சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் 99வது நிகழ்ச்சிய
கொல்கத்தா: ‘மம்தா பானர்ஜி கடவுள் போன்றவர். பூசாரி கூட திருடன் ஆகலாம். ஆனால் கடவுள் ஒருபோதும் தவறு செய்ய முடியாது’ என மேற்கு வங்க மாநில அமைச்சர் சோபன்தேப் சட்டோபாத்யாய் பேசி உள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் தேர்வில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் பார்தா சட்டர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லக்னோ: ‘பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய கட்சிகளை தேசிய கட்சிகள் ஆதரிக்க வேண்டும்’ என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். உபி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரத்தில், காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு சமாஜ்வாடி ஆதரவு தெரிவிக்குமா, ராகுலுக்கு அனுதாபம் காட்டுமா என்பதல்ல கேள்வி. நாட்டின் ஜ
சண்டிகர்: அம்ரித் பால் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை பாட்டியாலா போலீசார் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர் அண்மை காலமாக வெளிநாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 18ம
சென்னை: ராகுல்காந்தியை எம்பி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் நேற்று 7 இடங்களில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி எம்பியை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்
கோவை: மேட்டுப்பாளையம் அருகே தான் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீப்பிடித்ததாக பாஜகவை சேர்ந்த விஸ்வநாதன் போலீசில் புகார் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் பாஜக பிரமுகர் விஸ்வநாதனே தன்னுடைய சட்டைக்கு தீவைத்து விட்டு நாடகமாடியது தெரியவந்தத
வேலூர்: காட்பாடி அடுத்த லத்தேரி அருகே செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற காரை போலீஸ் விரட்டி பிடித்தனர். கார் ஓட்டுநர் தப்பிய நிலையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 50 கிலோ எடை பிரிவில் வியட்நாம் வீராங்கனை குயேன் தி டாமை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார
சிவகங்கை: மானாமதுரை அருகே எம்.கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் மாரிமுத்து, வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் ஊழியர் அய்யனாருக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் சாதியை கூறி தாக்கியதாக புகார் எழுந்தது. அய்யனார் அளித்த புகாரில் ஊராட்சித் தலைவர் மாரிமுத்துவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மாரிமுத
மன்னார் வளைகுடா: மன்னார் வளைகுடாவில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 ஆலிவ் ஆமைகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். மீன்பிடி வலையில் இருந்து 7 ஆமைகளையும் மீட்டு கடலோர காவல்படையினர் மீண்டும் கடலில் சேர்த்தன
பாஸல்: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் டாங் கியான், ரென் யூ சியாங் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாஸல் நகரில் நடைபெற்ற போட்டியில் 21-19, 24-22 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஜோடி வெற்றி பெற்றத
வாஷிங்டன்: வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தப்பியோடிய பஞ்சாப் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். மேலும், இந்தியாவுக்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அங்கு ெசய்தி ச