பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று (26) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது எக்ஸ் வலைத்தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.இந்த சந்திப்பில் அரசியல் நிலவரம் உள்ளிட்ட
இந்த சந்திப்பில் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து சுமுகமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பசில் ராஜபக்ச தி...
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்தின் தலைவராக இருப்பதற்கு பலத்த போட்டி நிலவுவதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தனவும் போட்டியில் இணைந்துள்ளார்.
இன்று (27) முதல் மே 1 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பிரசார பவனியை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.மோட்டார் சைக்கிள் பிரசார பவனி இந்த பவனி மே தினப் பேரணி நடைபெறும் இடத்தை வந்தடைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணி
இலங்கை போக்குவரத்து சபைக்கு சித்திரை புத்தாண்டின் போது சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் ஐந்தாம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஒரு வாரத்தில் அதிவேக வீதியின் வருமானம் 130 மில்லியன் ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார்.போக்குவரத்திற்கு இடையூறுஅத்தோடு கடந்த 12 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் ...
ஹாலிஎல பிரதேச செயலகத்தில் மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (25) விநியோகிக்கப்பட்ட அரிசி, பூச்சி கூடுகளுடன் பாவனைக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மக்கள் ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்இதனை உறுதிப்படுத்திய ஹாலிஎல பொது சுகாதார பரிசோதகர் தனுஜய பிரதீப், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.<...
இலங்கையின் வடக்கு கிழக்கில் காணிகள் தொடர்பில் பதற்றம் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Patrick Grady கேள்வியெழுப்பினார். அ...
ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி வந்த எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றம் தொடர்ந்து வருகின்ற நிலையில் ஒரு பக்கம் காசாவில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதுடன் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகின்றது.
அத்தோடு காசா மீதான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், செங்கடல் வழியாக செல்லும் வ...
ஈராக் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்திய ஓம் ஃபஹத் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தலைநகரின் கிழக்கு Zayne பகுதியில் வெள்ளிக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்தது.
காரில் சென்று கொண்டிருந்தபோதுஈராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "சமூக வலைதளங்களில் அறியப்பட்ட பெண்" "இனந்தெரியாதவர்களால்" கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது.
அவரது மரணத்தின் சூழ்நிலையை விசாரிக்க "சிறப்பு குழு" அமைக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியத...
உலகின் மிகவும் பிரபல சுற்றலாதளமான வெனிஸ் நகரம், முதன்முறையாக, சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது.
வெனிஸ் நகரமானது இத்தாலியிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமாகும்.
தற்போது, அங்கு உலகிலேயே முதன்முறையாக, சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.வெனிஸ் நகரம்
அதற்கமைய, வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா செல்ல நுழைவுக்கட்டணமாக 5.37 டொலர்கள், அதாவது இலங்கை மதிப்பில், 1,593.46 ரூபாய் அறவிடப்ப...
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானமொன்றின் அவசரகால கதவு நடுவானில் இருந்து கீழே விழுந்ததில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஜோன் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து(John F. Kennedy International Airport) சென்ற விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸ்(Delta Air Lines) விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக விமானம் ஒன்று லொஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகர் நோக்கி புறப்பட்...
சர்வதேச மன்னிப்புச் சபை, தமது உலகளாவிய வருடாந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல், பதிவுகளை கடுமையாக சாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீதி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விடயத்தில் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதனையும் காணாதநிலையில், தண்டனையின்மை தொடர்ந்தும் நிலைபெற்றுள்ளது என்று மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.அதுமாத்திரமன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடி வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக...
இலங்கையிலுள்ள பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அபிவிருத்தி செய்ய அல்லது பராமரிக்க போகின்றோம் என்ற தோரணையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது அது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், சிறிலங்கா அதிபர் செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் (Kaleelur Rahman) தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரி...
இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
குறித்த சம்பவம் தெனியாய - விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் பதிவாகியுள்ளது.அபூர்வ ஆட்டுக்குட்டி
அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்தி...
உக்ரைன் மோதலில் ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் சீனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளின்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பனிப்போருக்குப் பின்னர் இந்த ஒத்துழைப்பு ஐரோப்பிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறியதாக வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.அமெரிக்காவின் நடவடிக்கை என்ன
அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேலுடனான மோதலை...
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த பாடசாலையின் அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பதவி முத்திரையை பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த கட்சியின் பேச்சாளர் சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் நியமனம் வழங்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் ப...
கனடாவில் கடந்த எட்டாம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தை பாதுகாப்பற்ற முறையில் நேரடியாக பார்வையிட்ட 160ற்கும் மேற்பட்டவர்களுக்கு கண் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
கண் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் சூரிய கிரகணம் காரணமாக கண் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலருக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்படக்கூடிய அ...
மக்கள் நீராடச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறிவதற்கு ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீராடச் சென்ற இடத்தில், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டில் அண்மைக்காலத்தில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஒரு தீர்வை பெறும் பொருட்டு சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது.அதன்படி, தற்போது நீரில் மூழ்கி ஏற்படும் மரணங்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சகம் கண்டறிந்து வருகிறது.<...
இலங்கையிலிருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சிறுவர்களின் நிலை தொடர்பாக காவல்துறையினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.கடந்த புதன்கிழமையன்று (24) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை மற்றும் அவர்களுடன் கொழும்பில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, இந்த வாரம் மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் மற்றும் த...
தாய்வானின் ஹுவாலியன் நகரில் இன்றையதினம் (27.04.2024) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தாய்வானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது...
ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி வெற்றிகரமாக துரத்தி பிடித்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் நேற்றையதினம்(26) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றது.உலக...
அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அலுவலகத்தில் நேற்று(27) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கையில் அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ச...
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன? என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு ...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, வடமத்திய மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலியில் இருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான காலப்பகுதியில் ஒரு சில இடங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தி...
“உலக சந்தை நிலவரங்களில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது” என மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எரிசக்தி துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் சந்த...
எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில்லை என அக்கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மொட்டுக் கட்சியின் ஆதரவை வழங்கும் தீர்மானம் குறித்து நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa), டீ.வி. சானக, திஸ்ஸ குட்டியாரச்சி, டப்.டீ.வீரசிங்க போன்றே இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர...
வவுனியாவில் பெண் ஒருவரை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று(26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை பெண் ஒருவர் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார்.
ஹமாஸ் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
அதன் படி, தனது இறுதி இலக்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரை குறிவைத்துள்ளதகா தெரிவிக்கப்படுகிறது.முக்கிய நகரம்
இந்நிலையில், காசா நகரில் இஸ்ரேலிய படைகள் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்கும் வரை தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், தெற்கு காசாவில் அமைந்துள்ள முக்கிய நகரான ரஃபாவில் உள்ளே நுழைந்து இ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(26) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.யாழில் இடம்பற்ற சம்பவம்
குறிப்பாக வட மாகாணத்தில் யாழ்ப்ப...
அமைச்சரவையில் இருந்து நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை நீக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை
விடுத்துள்ளது.
எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன்
இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை அமைச்சரவையில்
இருந்து நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.மொட்டுக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை
விஜயதாஸவுக்குப் பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க பெரேராவை உள்வ...
தெற்கு பிரேசிலில் போர்டோ அலெக்ரே நகரில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றினால் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தீ விபத்தானது, வீடற்றோருக்கு முகாமாக செயற்பட்டு வந்து விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் தீயினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தடவியல் நிபுணர்கள்
அதேவேளை, இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென...
அமெரிக்காவின் வீதியோரங்களில் நுட்பமான வடிவமைப்புடன் பயணித்த காரின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த காணொளியில், கார் தலைகீழாக கவிழ்ந்து சக்கரங்கள் மேலே இருக்கும் நிலையில், காரை சாரதி வழக்கம் போல ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.வைரலாகும் காணொளிசக்கரங்கள் மட்டுமின்றி கார் எண் உட்பட அனைத்துமே தலைகீழாக இருக்கும் நிலையில், பார்ப்பதற்கு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காரை எப்படி ஓட்டி செல்கிறார்? என்று பயனர்கள் திகைப்படையும் வகையில் காணொளி உள்ள...