இந்த வருடத்தின் ஜூலை 15ஆம் திகதி வரையில் 1,095,675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன (Somaratne Vidanapathirana) தெரிவித்துள்ளார்.இந்த நிலை தொடருமானால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலை பதிவான 2018ஆம் ஆண்டை விடவும் நல்ல நிலையை அடைய முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத...
வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Dgi) இடம்பெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வ...
நாட்டில் குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் அதிகார சபை (Consumer Affairs Authority) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் டி.ஐ. உடுவர குறிப்பிட்டுள்ளார்.<...
நிட்டம்புவ (Nitambuwa) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து நிட்டம்புவ - திஹாரிய பகுதியில் இன்று (27) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என ஐபிசி தமிழ்
பொது செய்திகள்
கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman), சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்றார்.ஜனாதிபதித் தேர்தல் (Presidential Election) திகதி நேற்று (26) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (27) கிழக்கு ஆளுநர் ஆசி பெற்றுள்ளார்.இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நிலவும் சமாதானம்
மற்றும் நல்லிணக்கம் பற்றியும் சகல சமூகங்களுக்கிடையிலும் சி...
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை (Dhammika Perera) எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவல்களை ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க (Udayanga Weerathunge) தெரிவித்துள்ளார்.உத்தியோகபூர்வ தகவல்கள்எனின...
தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (
Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்....
சிறிலங்காவின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) வாக்களிக்கவுள்ளோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது போகுமென்ற அச்சத்தைக் கொண்டுள்ள வாக்காளர்கள், பிறிதொரு வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் வாக்களிப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விட...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் எல்லை தாண்டி
மீன்பிடித்த வழக்கில் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு புழல்
சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர் ஏழு பேரை ராமநாதபுரம் தலைமை
குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி கடலோர காவல் படையினர் வைபவ் ரோந்து கப்பல் கடந்த மே 18 ஆம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கன்னியாகுமரிக்கு தென் கிழக்கே 74.8 கடல்
மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் நின்று கொண்ட...
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த சில மாதங்களில் தளர்த்தப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அத்தியாவசிய வாகனங்களுக்கான தடை படிப்படியாக தளர்த்தப்பட்டதுடன், அடுத்த சில மாதங்களில் மற்ற வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனங்களின் விலை
பொருளாதா...
தமிழ் தேசிய வீரர்களின் 41ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் வவுனியாவில் (Vavuniya) முன்னெடுக்கப்பட்டது.வவுனியா - வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) அலுவலகத்தில் இன்று (27) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை
இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை (A.Thangathurai), தளபதி குட்டிமணி (Kuttimani), முன்னணி போராளி ஜெகன் உட்பட
53 தமிழ் அரசியல் போராளிகள் இதன்போது நினைவுகூரப்பட்டனர்.<...
புத்தளம் பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் பிரதான நிலை பாடசாலையின் கணித பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில், கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பாடசாலையின் ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளா...
ஒலிம்பிக் போட்டிகளிற்கு முன்னதாக பாரிசின் முக்கியமான தொடருந்து பாதைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக பிரான்சின் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தொடருந்து பாதைகளை இணைக்கும் பிரான்சின் TGV அதிவேக தொடருந்து வலையமைப்பின் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.பிரான்சின் தொடருந்து பாதைகளில் தீமூண்டுள்ளதாக பிரெஞ்சு தொடருந்து நிறுவனமான (SNCF) தெரிவித்துள்ளது.வன்முறையாளர்கள் தீலில்லி போர்டோக்ஸ் மற்றும் ஸ்ட்ரா...
யாழ்ப்பாணம் (Jaffna) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப்பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுடை சந்தியில் நேற்று (26.7.2024) ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சந்தேகநபர்கள் கைது
இச் சம்பவத்துடன...
நவ சம சமாஜ கட்சியின் மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் (Wickramabahu Karunaratne) இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.
பொரளை (Borella)– பொதுமயானத்தில் இன்று (27.7.2024) பிற்பகல் 5 மணிக்கு இறுதிக் கிரியை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன கடந்த புதன் கிழமை காலமானார்.தமிழர் பிரச்சினைமறைந்த விக்ரமபாகு கருணாரத்ன தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பி...
கூகுள் தேடலை அடிப்படையாக வைத்து
உலகில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகள் பட்டியலிப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி,இயற்கை அழகு, உயர் வாழ்க்கைத் தரம் மற்றும் கலாச்சாரம் போன்ற பல காரணங்கள் இந்த இடங்கள் விரும்பப்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம்.கனடா(Canada)
அந்தவகையில் மக்கள் அதிகம் செல்வதற்கு விரும்பக்கூடிய நாடுகளில் முதலிடத்தில் கனடா உள்ளது.
குறிப்பாக மாணவர்கள் இடம்பெயர்வதற்கு மிகவும் பிரபலமான இடமாக பார்க்கப்படுகின்றது...
வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.அந்தவகையில், வடக்கிலிருந்து கொழும்புக்கு பழங்களை கொண்டு வருவதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகள் இன்மை, களஞ்சிய...
யாழில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறி்த்த கைது நடவடிக்கையானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் (Jaffna) - மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (25) வியாபாரத்தினை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற வேளை வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.முன்பகைஇந்தநிலையிலேயே , குறித்த தாக்குதல் சம்பவத்...
திருகோணமலை(Trincomalee) - இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகளை அப்பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி துப்பரவு செய்வதால் அப்பகுதியில் பதற்ற நிலை எழுந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியிலுள்ள
விகாரையின் விகாராதிபதி குச்சவெளியான் குளத்துக்கு பொதுமக்களுக்கு சொந்தமான
விவசாய நிலங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்புரவு செய்து வருவதாகவும்
அப்பகுதியிலுள்ள காண...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவினை தெரிவிக்கப் போவதில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் ஒரு சமூகத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கக் கூடாது.பொது வேட்பாளர்
குறிப்பாக ஜன...
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களை அழைத்து அவர்களுடன் விவாதம் நடத்தி கேட்டு மக்கள் ஆராயகூடிய விதத்திலே ஒரு பகிரங்க தளத்தை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகவுள்ள வேட்பாளர்கள் இந்த தளத்தை உபயோகிக்க முன்வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இனிவரும் நாட்களில் சர்வதேச நாணயநிதியத்...
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் எச்.ஐ.வி. (HIV) நோயிற்கான தடுப்பு மருந்தை தென்னாபிரிக்க (South Africa) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்னாபிரிக்காவின் கேப்டவுன் (CAPE TOWN, South Africa) பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த மருந்தை கண்டுபித்துள்ளனர்.நோய் எதிர்ப்பு சக்திஅந்தவகையில், ஆண்டுக்கு இருமுறை என ஊசி மூலமாக செலுத்தப்படும் இந்த மருந்து மூலமாக எச்.ஐ.வி. தொற்றால் பாதிக...
இலங்கை(Sri lanka) கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ(Binura Fernando), சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அணிக்கு எதிரான தொடரில் பினுர பெர்னாண்டோவிற்கு பதிலாக ரமேஷ் மெண்டிஸ்(Ramesh Mendis) இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி
இலங்கைக்கு சுற்ற...
வியாழன் கிரகத்தை விட ஆறு மடங்கு பாரிய "Super Jupiter" எனும் கிரகத்தை நாசாவின் (NASA) ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
நாசாவின் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கி இந்த மாபெரும் கிரகத்தின் சில படங்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்தவகையில், இந்த பிரமாண்ட கிரகம் பூமியில் இருந்து 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஒரு நுற்றாண்டுஇந்த கிரகம் தனது நட்சத்திரத்தைச் ஒரு முறை ...
வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை
வவுனியா(Vavuniya) வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
நேற்றுமுன் தினம் (25.07.2024) வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்டது.
அந்த அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார்.க...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்து இறங்கினார்.
இக்கூட்டமானது, இன்று (26.07.2024) அத்துருகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் வந்து இறங்கியமை விசேட அம்சமாகும்.அமைப்பாளர்களின் கூட்டம்
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், தேர்தல் சட்டங்கள் நடைம...
யாழில் கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று (26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தவகையில், யாழ். (Jaffna) காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலில் அடிப்படையில் தொலைபேசியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட காவல்துறைகன்னாதிட்டி பகுதியில் சமுர்த்தி அலுவலகத்தில் பணி புரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலைய...
யாழ்ப்பாணம்(Jaffna) உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(26) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
பரபரப்பான சூழல்
இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்ட...
சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருந்து ஜேர்மனுக்கு (German) செல்ல புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சூரிச் (Zurich) விமான நிலையத்தில் இருந்து நேற்று (26) பெர்லினுக்கு சென்ற LX974 என்ற சுவிஸ் விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமானம் இன்று காலை 7.42இற்கு விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது.அசாதாரணமான வாசனை எனினும்,...
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிட்செலும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தொலைபேசியில் கதைத்து அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இது தொடர்பான காணொளியையும் பராக் ஒபாமா(Barack Obama )சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
குறித்த காணொளியில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பராக் மற்றும் மிச்செல் பேசுகின்றனர்....