எதிர்வரும் 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் தற்போது சர்வதேச கால்பந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த சூழலில் 2026 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து மெஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகி டிசம்பர் 4 ஆம் தேதி மாலை சென்னை - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
“மோடி ஆட்சியின் ஊழல், முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது பேரணியில் அவர் பேசியதாவது:
“தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி பாஜக தலைவர் அண்ணாமலை தான். சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு அவரின் செயல்பாடு உள்ளது” என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டி 20கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் உள்ள பர்சபரா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி டி 20 தொடரை 3-0 என தன்வசப்படுத்திக் கொள்ளும்.
"ராஜஸ்தானில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி, முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை" என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி தெரிவித்துள்ளார்.
“2020-ல் படத்தை தொடங்கினோம். 3 வருடமாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டோம். இந்த டைட்டிலின் புகழுக்கு களங்கம் விளைவிக்க மாட்டோம் என நம்புகிறோம்” என்று ‘ஃபைட் கிளப்’ பட நிகழ்வில் நடிகர் விஜய்குமார் உருக்கமான பேசினார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் 15-ம் தேதிக்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயாராகிவிடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் இயல்பைவிட குறைந்த குளிரும், ஒருசில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழையும் பதிவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சில அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ராணிப்பேட்டை மாவட் டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள கொசு ஒழிப்பு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
“மத்திய அரசால் பலன் அடைந்தது அதானி குடும்பம் மட்டுமே. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட்களுக்கான ஆட்சி நடத்துகிறது” என்று திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுப்பெற்றுள்ளது. இது, புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 780 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 940 கி.மீ. தொலைவிலும் நிலை கொண் டுள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (டிச.4) மாலை சென்னைக்கும், மசூலிபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் காட்பாடி அருகே அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. பயிர் சேதத் தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ஒரு தனிநபரின் தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையும் குறைகூறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் விழுப்புரம் மாவட்டம் மரக் காணம் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. ராட்சத அலைகள் எழும்பி பல அடி தூரம் தரைப்பகுதி நோக்கி வருகிறது.
கிட்டசூராம்பாளையம் அம்மணீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவரை மாற்ற வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.