விவிபாட் இயந்திரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தீர்ப்பில், "பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது." என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூரு, மைசூரு, சிக்கப்பள்ளாப்பூர் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பிஆர் எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் பேருந்து யாத்திரை மூலம் தனது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் நடத்தி வருகிறார்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்று விட்டது. 29-ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தல் நாளான நேற்று 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
‘கேஜிஎஃப்’ படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்த இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு, மைம் கோபி உட்பட பலர் நடித்தனர்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், கடந்த 2019-ம் ஆண்டு, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட் டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கிவந்த, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயிற்சி முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 300-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இவர் நடித்த இனிமேல் என்ற இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் டாட்டூ கலைஞர் சாந்தனு என்பவரைக் காதலித்து வந்தார். இவரும் திருமணம் செய்து கொள்ளாமல் மும்பையில் சேர்ந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 630-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 2800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தடையில்லா மின்விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார். நடத்தினார்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்குஎதிரான மேம்பால முறைகேடு வழக்கை 18 ஆண்டுகளுக்கு முன்பாக பேரவைத் தலைவர் திரும்பப் பெற்றதை எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா? என்பது குறித்து மனுதாரர் தரப்பில் விளக்க மளிக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 அணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு எம்எல்ஏக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, போக்குவரத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும், முறையாக பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் எப்படி நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் இருப்பவர் இ.பி. ஜெயராஜன். இந்நிலையில், ஜெயராஜன் குறித்து பாஜக சார்பில் ஆலப்புழாவில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரன் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.
இத்தாலியின் புக்லியாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை, பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார். இதற்காக, அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை செலுத்தி வருகின்றனர். உண்டியல் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.