சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீடிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி வரை தடையை நீடிக்குமாறு இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் (Chandrika Kumaratunga) சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலைய...
நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (09.5.2024) காலை யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.வாகனங்களை மறித்து சோதனை காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் (Deshabandu Tennakoon) ஆலோசனைக்கு அமைவாக போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் யுக்திய சுற்றி...
ஈழத்தமிழ் ஏதிலிகள் 58,200 பேர் தமிழ்நாடு முழுவதும் 104 முகாம்களில் வசித்து வருவதோடு 33,200 இற்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய (India) அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டு நிலவரப்படயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இவர்களின் சிவில் ஆவணங்களைப் பொறுத்தவரையில் 95 வீதமானோர் இந்திய அடையாள அட்டைகளையும், 78 வீதமானோர் வங்கிக் கணக்குகளையும் ஒரு வீதமானோர் இலங்கைக் கடவுச்சீட்டுகளையும் 03 வீதமானோர் இலங்கை தேசிய அடையாள ...
சிறிலங்காவின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் (Presidential Election) தமிழ் அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை களமிறக்கினாலும் தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கே (Ranil Wickremesinghe) கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்கள் விரும்புகின்ற தலைவராக அதிபர் ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார்.அதிபர் தேர்தல்
...
தனது அமைச்சுப் பதவி விட்டு விலகுமாறு சிலர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
போதைப்பொருள் வலையமைப்புகளை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் யுக்திய நடவடிக்கைகளினால் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புள்ளவர்கள் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகிப்பதாக அவர் தெர...
காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை சுமந்த "ஊழி" திரைப்பட பாடல்கள் நேற்று(9) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு
பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் குறித்த வெளியீட்டு
நிகழ்வு இடம்பெற்றுள்ளது.காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை சுமந்த குறித்த திரைப்படம் மே 10ம் திகதி 16
நாடுகளில் 70 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பாடல்களே வெளியீடுகதை, திரைக்கதையுடன் ஜோசப் ரஞ்சித்...
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த சிறி செயானந்தபவன் அகிலத்திருநாயகி (Sri Seyananthabavan Akilaththirunayaki) அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வானது நேற்று (08) முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் தலைமையில் சிறப்புற நடைபெற்றுள்ளது.இதன்போது கடந்த ஆண்டு தனது 72 ஆவது அகவையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைப...
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது உயர்வடைந்திருந்த நிலையில் இன்றையதினம்(9) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 691,274 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங...
கொரோனா -19 (Covid -19) தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பப்ப...
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் (Vijayakanth Viyashkanth) சன்ரைசர்ஸ் அணி சார்பாக தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் நேற்றைய தினம் களமிறங்கியுள்ளார்.ஐபிஎல் தொடரில் முதன் முறையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.ஆட்டத்தின் முடிவில் தனது முகப்புத்தக பதிவில் குறித்த விடயத்தை வியாஸ்காந்த் தெரிவித்துள்ளார்.எல்லையற்ற நன்றிஅந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில், என்னு...
ஏற்றுமதியை எளிதாக்கவும், வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், காகிதமில்லா வர்த்தகத்தை உறுதி செய்வதற்காகவும், இலங்கை சுங்கம் உள்ளிட்ட எல்லை முகவர்களால் வழங்கப்படும் சேவைகளை அரசாங்கம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை உலகளாவிய ஏற்றுமதியாளர்கள் மன்றத்தின் (Global Shippers Forum) தலைவர் சீன் வான் டார்ட் (Sean Van Dort) தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார், இ...
இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அறிக்கையின்படி, ஜனவரி 1, 2023 மற்றும் டிசம்பர் 25, 2023 க்கு இடையில் 1,769 போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட 1,769 போலி நாணயத்தாள்கள் தொடர்பான 11 நீதிமன்ற வழக்குகளுக்கான தரவுகளை இலங்கை மத்திய வங்கி நீதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.
மேலும், இலங்கையில் ஒரு மில்லியன் நாணயத் தாள்களுக்கு சுமார் 1.4 போலி நாணயத் தாள்கள் புழக்கத்...
2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு (Sri lanka) கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்றிரவு (08) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் (Thailand) பாங்கொக் (Bangkok) நகரில் இருந்து இரவு 10.40 அளவில்இலங்கைக்கு வந்தி...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(08) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை (Diana Gamage) கைது செய்வதற்கான ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.டயானா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியில்லை என உயர் நீதிமன்றம் (High Court of Sri Lanka) நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது. எனினும், உயர் ந...
நாட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் குழந்தைகள் பீட்டா தலசீமியா (Beta thalassemia) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலசீமியா நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஈ. எம் ரஞ்சனி எத்ரிசூரிய தெரிவித்துள்ளார்.குறித்த நோய் நிலையை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் தலசீமியா நோய் கொண்ட குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு நேற்று (08.5.2024) கொழும்பு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விசேட வைத்தியர் இதனை குறிப...
இலங்கை(Srilanka) அதிபர் தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை மிக பாரிய அளவில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவலட் வெளியாகியுள்ளது.
மேலும்,கட்டுப்பணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க(A.L Ratnayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “பொது மற்றும் சிவில் அமைப்புக்களிடம் இருந்து இது குறித்த யோசனைகள் கோரப்பட்டது.தேர்தலுக்கான கட்டுப்பணம்
கட்டுப்பணத் தொகையை...
இன்று மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 26ஆம் நாள் வியாழக்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி).
இன்று காலை 07.43 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
உத்திரம் அஸ்தம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
மேஷம்
நினைத்த காரியங்களை தடை இன்றி நடத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள். செல்வாக்கு உயரும். திருமணம் க...
சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்கு (srilanka) எடுத்து வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு (colombo) பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.கைது நடவடிக்கை குறித்து மேலும் தெரியவருகையில்,சூட்சுமமான முறை கடத்தல்
கட்டு...
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,மின்னலினால் ஏற்படும் ஆபத்துவட மத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் பலத...
தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதி அதிகாரங்களை வழங்குவோம் என ஜே.வி.பி கூறியுள்ளமை கிராமங்களில் மீண்டும் காட்டாறு சட்டத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
88/89 காலப்பகுதியில் ஜேவிபி மக்களைக் கொன்று கிராமங்களில் காட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது மக்களுக்கு இன்னமும் நன்றாக நினைவில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.தீவிரவாத குழுக்கள் ஆட்சிக்கு வந்தால...
காஸா நகரமான ரஃபாவில்(Rafah) பாரிய தரைப்படை நடவடிக்கையை தொடங்கினால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தும் என்று அதிபர் ஜோ பைடன்(Joe Biden) இஸ்ரேலுக்கு(Israel) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"அவர்கள் ரஃபாவிற்குள் சென்றால், ரஃபாவைச் சமாளிக்க வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை நான் வழங்கமாட்டேன்," என்று அவர் CNN க்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில்
"இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் தொடர...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கி திருமதி டயானா கமகேவுக்கு(diana gamage) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியமான தீர்மானம் எனவும் அந்த முடிவின் மூலம் நாடாடாளுமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார(nalin bandara) தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.டயானா கமகேவிற்கு எதிரான தீர்ப்பு
...
தன்னுடன் செல்பி எடுக்க மிகுந்த ஆவலுடன் வந்த ரசிகரை பங்களாதேஷ் அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசன்(Shakib al Hasan) தாக்க முயன்ற காணொளி வைரலாகியுள்ளது.
அந்த காணொளியில் ஷகிப் சக வீரர்களுடன் மைதானத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ரசிகர் ஷகிப் உடன் செல்பி எடுக்க முயன்றார்.ரசிகரின் கழுத்தை பிடித்து தாக்க முயற்சி
இதனால் கோபமடைந்த ஷகிப், ரசிகரின் கைபேசியை பறிக்க முயன்றார். மேலும் ரசிகரின் கழுத்தை பிடித்து தாக்க முயன்றார். இதனை தொடர்ந்து அந்த ரச...
சிங்கள, தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மதுபான பாவனை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் நடத்திய கணக்கெடுப்பில், கடந்த காலங்களை விட இந்த வருட புதுவருட கொண்டாட்டத்தில் மதுபாவனையின் அளவு குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில், இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய மொத்தம் 415 பேரிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.இந்த மாதிரியில், 46.2% (192) பெண்கள் மற்றும் 53.7% (223) ஆண்கள் அடங்குவர்.குறைவடைந்த மதுப...
இரத்தினபுரி(ratnapura) பிரதேசத்தில் தமிழ் மொழி மூலம் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு தகுதியான பாடசாலை இல்லாத காரணத்தினால் மாணவர்கள் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட (Gamini Valeboda)நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனால் இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை ஆகிய இரு நகரங்களிலும் தமிழ் மொழி மூல மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த வலேபொட, இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை தமிழ் மொழி...
நாய்கள்(dogs) பெரியவர்களை விடவும் சிறுவர்களையே பெரும்பாலும் துரத்தி துரத்தி கடிப்பதுண்டு. இவ்வாறு நாய்கள் சிறுவர்களை(children) ஏன் குறிவைத்து தாக்குகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபல கால்நடை மருத்துவர் பற்றிக் ஜோஷ்வா தெரிவிக்கையில், "நாய்களின் பெரும்பாலான இலக்காக இருப்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான். ஏனென்றால், அந்த வயதில் உள்ள குழந்தைகளின் செயற்பாடுகள் அப்படி இருக்கும். நாய்களுக்கு பிறவிலேயே பிடிக்காத செயல்பாடுகள்...
களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலை கைதி ஒருவர் கழிவறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தப்பியோடியவர் வாத்துவ, தெல்துவ, தெவிருகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.போதைப் பொருளை வைத்திருந்த நிலையில்
குறித்த கைதி 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் களுத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 29ஆம் திகதி களுத்த...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விமான எரிபொருள் சேமிப்பு நிலையத்தை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் காணியொன்றை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஜெட் எரிபொருள் விநியோகம் நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தரும் பிரதான ஆதாரமாக இருப்பதாக தெரிவித்த அவர், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) அதன் ஏகபோக உரிமையை ஏன் இழக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.இலங்கை...
ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவருமே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டவர்களாவர்.குருநாகல் பிரதேசத்தில் கைது
குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ப...