கனடாவில் (Canada) பணியாற்றி வரும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இதனடிப்படையில், கனடிய மத்திய அரசாங்கம் குறைந்தபட்ச மணித்தியால சம்பளத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிக கூடிய சம்பள திட்டத்தின் கீழ் இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுபுறத்தில் இவ்வாறு சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதனால் தொழில் தருணர்கள் அதிக அளவு உள்நாட்டு கனேடியர்களை பணியில் அமர்த்த கூடுமென எதிர்...
2025 ஆம் ஆண்டு குறித்து மக்கள் உலக சாத்திர சாரியான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்பு தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.பாபா வங்காவும் மற்றும் நாஸ்ட்ரடாமஸும் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்களானாலும், 2025 ஆம் ஆண்டைக்குறித்து ஒரே விதமாக கணித்துள்ள விடயம் வியப்பை உருவாக்கியுள்ளது.
பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியா நாட்டில் பிறந்து 1996 ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.எதிர்கால கணிப்பு 12 வயதாக இருக்கும் போது பெரும் புயல் ஒன...
வடக்கு காசாவில் (Gaza) உள்ள பெய்ட் லஹியாவில் (Beit Lahia) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதாகவும், மீட்புக் குழுவினரால் அவர்களை அடைய முடியவில்லை என்றும் மேலும் தெரியவந்துள்ளது.அதிரவைக்கும் தாக...
காசாவில் (Gaza) இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.அத்துடன், இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப...
காசாவின் (Gaza) மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டது, ஹமாஸ் அமைப்பிற்கு வெறும் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு தாக்குதல்இந்நிலையில் நேற்று மாலை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா (Jabalia) அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்க...
இஸ்ரேலின் (Israel) ஒக்டோபர் 7, 2023 தாக்குதல்களின் மூளையாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரைக் (Yahya Sinwar) கொல்லும் ஒரு வருட காலப் பணியில் இஸ்ரேல் புதன்கிழமை வெற்றி பெற்றது.
சின்வாரின் மரணம் ஹமாஸுக்கு பெரும் அடியாக இருந்தாலும், அது அந்தக் குழுவின் உடனடி அழிவைக் குறிக்கவில்லை.
சின்வார் உட்பட தலைவர்கள் கொல்லப்படுவது அவர்களின் இயக்கத்தின் முடிவைக் குறிக்காது என்று கூறி, தொடர்ந்து போராடுவதாக ஹமாஸ் உறுதியளித்துள்ளது.அடுத்த தலைவ...
உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவரும் கனடா அரசு தற்போது பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ளது.
விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் விசா ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகள் மூலம் சர்வதேச விண்ணப்பதாரர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் தேவையுடையோரி...
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) உறுதி படுத்தியுள்ளது.
ஒரு வருடகால தேடுதலுக்கு பிறகு நேற்று காசாவின் தெற்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸின் மூத்த உறுப்பினர்களின் சந்தேகத்திற்கிடமான இடங்களைச் சுட்டிக் காட்டிய உளவுத் தகவலைத் தொடர்ந்து, தெற்கு காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அதில் சின்வாரும் அடங்குவத...
பிரான்சில் புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, குறித்த விடயம் தொடர்பில் புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த பிரதமர் மிஷெல் பார்னியேர் அரசு திட்டமிட்டு வருகிறது.
அத்துடன், 2025 தொடக்கத்திலேயே புலம்பெயர்தல் சட்டம் தொடர்பான யாப்பு ஒன்றை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய அந்நாடு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.புதிய சட்டம்
கடந்த செப்டம்பர் மாதம் பிரான்ஸ் மாணவி ஒருவருக...
அமெரிக்காவில் மூடநம்பிக்கைக்காக பெண்ணொருவர் பெற்ற தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிலுள்ள கென்டக்கி(Kentucky) மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய டோரிலினா ஃபீல்ட்ஸ்(Torilena Fields) என்னும் பெண்ணே இவ்வாறு தனது தாயைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.கொலைச் சம்பவம்
குறித்த பெண் மாயமந்திரம், சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளில் ஆர்வம் க...
2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டாரன் அசெமேக்லு (Darren Acemeglu), ஜேம்ஸ் ராபின்சன் (James Robinson), சைமன் ஜான்சன் (Simon Johnson) ஆகிய மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். மருத்துவம், இயற்பியல், வேதியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங...
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதலிடம் பிடித்துள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கனடாவிற்கு இந்த இடம் கிடைத்துள்ளது.
இந்த அறிக்கையின் படி கனடாவில் 59.96% படித்தவர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கல்வி தகுதி
அறிக்கையின் இரண்டாவது இடத்தில் 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் உள்ளது.
லக்சம்பர்க் (Luxembourg) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதுடன் தென் கொரி...
ஈரானுக்கு (Iran) எதிராக தாக்குதல் நடத்த, எந்தவொரு சூழலிலும், இஸ்ரேலுக்கு (Israel) உதவி செய்ய வேண்டாம் என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.
குறித்த எச்சரிக்கையானது இன்றையதினம் (12.10.2024) ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி கமேனியினால் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பில் ஈரானின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளதாவது. லெபனான் (Lebanon), இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானில் ஹமாஸ் (Hamas) தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்...
இரண்டு வணிக கப்பல்களளை நேரடியாவும் கடுமையாகவும் தாக்கியதாக ஹவுதி செய்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ (Yahya Saree) அறிவித்துள்ளார்.
முதல் தாக்குதலாக 11 பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு ட்ரோன்களுடன் ஒலிம்பிக் ஸ்பிரிட் என்று அழைக்கப்படும் அமெரிக்க எண்ணெய் கப்பலை குறி வைத்து தாக்கியதாக அவர் தெரிவத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்தியப் பெருங்கடலில் செயின்ட் ஜான் என்ற கப்பலை, இறக்கைகள் கொண்ட ஏவுகணை மூலம் குறிவைத்து தாக்கியதாகவும் யாஹ்யா சாரீ குறிப்பிட்டுள்ளார்.<...
கனடாவில்(Canada) தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் கடந்த 05 ஆம் திகதி ரொறன்ரோவின் லோரன்ஸ் அவென்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 82 வயதான ஹென்றி ஜோசப் என்பவரே படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.காவல்துறையினரின் கோரிக்கை
இந்நிலையில், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மகனான அண்ட்று ஜோசப் என்ற 3...
கனடாவில்(Canada) சுமார் 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பர வாகனங்களை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கொள்ளைச் சம்பவம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த கைது நடவடிக்கையானது சந்தேக நபர்கள் தொடர்பாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
அவர்கள் கொள்ளையிட்ட பல வாகனங்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.கைது நடவடிக்கை
இ...
ஜேர்மனியில் அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில், "தமிழ் இளையோர் மாநாடு 2024" இளையோர்களின் பேரிணைவோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த மாநாடானது ஜேர்மனி என்னபெட்டல் நகரில் கடந்த 05 மற்றும் 06 ஆகிய 2 நாட்கள் பேரெழுச்சியோடு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.
இளையோர்களின் பேராதரவோடு இரு நாட்களிலும் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மாநாட்டில், முதல் நாளில் அனைத்துலக தொடர்பாக பொறுப்பாளரால் தொடக்கவுரை நிகழ்த்தப்பட்டது.
தெளிந்த பார்வை
மாநாட...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கவிருக்கும் நிலையில்,பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.
அத்துடன், மில்டன் சூறாவளியானது கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவில் வீசும் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மில்டன் சூறாவளியானது புளோரிடாவின் தென்மேற்கு கடற்கரையை உள்ளூர் நேரப்படி புதன்கிழமை(09) மாலைக்குள் தாக்கும் என எதிர...
பிரித்தானியா (UK) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிகவும் மோசமான குழப்பங்களை ஏற்படுத்த ரஷ்ய உளவுத்துறை செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியா தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுகையில் MI5 தலைவர் கென் மெக்கலம் (Ken McCallum) இதனை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதராவாக பிரித்தானிய செயற்பட்டு வருகிற நிலையில், பிரித்தானியாவில் நெருப்பு வைத்தல், நாசவேலை, மிக ஆபத்தான நடவடிக்கைகளை முன்னெடுக்க ரஷ்ய உளவுத்துறை செயற்பட்டு வருவதாக அவர் ச...
நேபாளத்தில் (Nepal) இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி சென்ற ரஷ்யாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முகாமில் இருந்து நேற்றையதினம் (08) பயணத்தை தொடங்கிய குறித்த வீரர்களின் தொடர்பாடல் கருவிகள் காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மாயமான வீரர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அந்த ஐவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணை
அதன் போது, மலையின் 7 கிலோமீட்டர் உயரத்தில் உலங்க...
இஸ்ரேல் 7 முனைகளில் போரை நடத்தி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் (Israel)-ஹமாஸ் போரின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ஹமாஸ், ஈரான், ஹிஸ்புல்லா, மேற்குக் கரை பயங்கரவாதிகள், ஏமனின் ஹவுத்திகள் மற்றும் ஈராக்-சிரியா ஷியா போராளிகளின் தாக்குதல்களில் இருந்து எங்கள் நாட்டை நாங்கள் பாதுகாத்து வ...
அமெரிக்காவின்(us) லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ321-200 ரக விமானம் 1326 சான் டியாக...
நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு(donald trump) அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்elon musk) ஆதரவளிக்கவுள்ளார். ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூக ஊடக வலையமைப்...
கொரோனாவின் போது ஏற்பட்ட உலகளாவிய ஊரடங்கு உத்தரவால், நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து போயிருந்தது என எதிர்பாராத ஆய்வு முடிவு ஒன்றை இந்திய ஆய்வாளர்கள் வெளியிட்டு உள்ளனர்.
2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் (China) உகான் பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது.
இந்த கொடிய நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக அளவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.<...
ஈரானின் (Iran) அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
பிரச்சார கூட்டமொன்றில் நேற்று (04.10.2024) கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது இஸ்ரேல் குறிவைக்கும் சாத்தியம் தொடர்பில் கேள்வி எழுப்பினால், தமது பதில், கண்டிப்பாக தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் தாக்கம்...
எதிராளிகளை இல்லாதொழிக்கும் வகையில் லெபனானில் (Lebanon) தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேலிய (Israel) பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலான்ட் ( Yoav Gallant) தெரிவித்துள்ளார்.லெபனானில் முன்னெடுக்கப்படும் இராணுவத் தாக்குதல்களில் பல்வேறு ஆச்சரியங்களை வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிராளிகளை இல்லாதொழிக்கும் வகையில் லெபனானில் தாக்குதல்கள் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லெபனானில் தாக்குதல்கள்இஸ்ரேலின் ஆயுதங்கள் தொடர்பி...
யேமனின் (Yemen) பல பகுதிகளில் ஹவுதி (Houthi) இலக்குகள் மீது அமெரிக்க (America) வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.யேமன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் (Iran) ஆதரவு கிளர்ச்சிக் குழு கூறியதை அடுத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.யேமனின் பல பகுதிகளில் ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஹவுதி கிளர்ச்சியாள...
செங்கடலில் வந்த பிரிட்டன் எணணெய் கப்பல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீனத்தை (Palestine) தொடர்ந்து லெபனானிலும் (Lebanon) தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை (Israel) எதிர்த்து ஈரான் (Iran) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்ச...
இந்த மாதம் 1ஆம் திகதி நடைமுறையாகும் வகையில், நியூசிலாந்து (New zealand) அரசு, அனைத்து வகை விசா கட்டணங்களிலும் 60 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளது.
குறிப்பாக, வேலை, கல்வி மற்றும் சுற்றுலா விசாக்களை விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் மீது இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த மாற்றம், குடியுரிமை அமைப்பை மக்களின் வரியிலிருந்து, விண்ணப்பதாரர்களின் கட்டணங்களால் சுயமாகப் பொறுப்பேற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.சுற்றுலா விசா கட்டணங்க...
லெபனான் (Lebanon) தலைநகர் பெய்ரூட்டில் (
Beirut) உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் (Beirut-Rafic Hariri International Airport) அருகே ஹிஸ்புல்லா (Hezbollah) இலக்குகள் மீது இஸ்ரேலிய நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் (Israel) லெபனானில் வரையறுக்கப்பட்ட தரைவழி தாக்குதல்களை மேற்கொள்வதாக அறிவித்து, லெபனானின் முக்கிய பகுதிகளில் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.
குறித்த தாக்குதல் இஸ்ரேலிய படை நுழையக் கூடிய இடங்களான ஒடெ...