உலகிலேயே அதிக நிலங்களை வைத்திருப்பவர்களாக பிரித்தானிய அரச குடும்பத்தினர் (Royal Family) இருந்து வருகின்றனர்
அதன்படி, உலகில் உள்ள அவர்களின் நிலங்களையும் சொத்துக்களையும் பராமரிப்பதற்கு மாத்திரம் தனியாக ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது.
இரண்டாம் எலிசபெத் ராணி (Elizabeth II) உயரிழந்த பின்னர் பிரித்தானியாவின் மன்னராக முன்றாம் சார்லஸ் மன்னர் (Charles III) முடிசூட்டப்பட்டார்.தனிப்பட்ட உரிமையாளர்
இதனை தொடர்ந்து, முன்றாம் சார்லஸ் மன்னர் உலகிலேயே அதிக ...
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் (İstanbul) விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது முன்பகுதி தரையுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும் விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் துருக்கியின் (turkey
) போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் கூறியுள்ளார்.குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தரையுடன் மோதி தீப்பொறி
பிரேசிலில்(Brazil) உள்ள கிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.குறித்த மாகாணத்தில் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மூன்றரை லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.மீட்பு பணிகள்அத்தோடு, சுமார்132 பேர் வரையில் வெள்ளத்தில் அடித்துச...
கனடாவில்(Canada) வரி கோப்புக்களை பதிவு செய்யாதோருக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கனேடிய வருமான முகவர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி ஏழு மில்லியன் கனேடியர்கள் இதுவரை வரி கோப்புக்களை பதிவு செய்யத் தவறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மொழிப் பிரச்சினை இந்நிலையில்,நாட்டில் சுமார் பத்து வீதமான கனேடியர்கள் வரி கோப்புக்களை பதிவு செய்வதே இல்லை என.சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொழிப் பிரச்சினை அல்லது அ...
நோர்வேயில் (Norway) யாழ்ப்பாணத்தை(Jaffna) சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.காவல்துறையினர் விசாரணைஇந்நிலையில், குடும்பஸ்தரின் உயிரிழப்பானது கொலையா ? தற்கொலையா ? என்பது குறித்து அந்த நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருக...
கனடாவில் (Canada) வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளை அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது.இதன்மூலமாக கனடாவுக்கு வரும் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி 5 ஆண்டுகள் வரை அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் என கனடா அறிவித்துள்ளது.
புதிய வீசா நடைமுறை
2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு...
மே மாதம் என்பது உலகத் தமிழர்களைப் பொறுத்தவரை வலிசுமந்த ஒரு மாதம்.
எமது உறவுகளை, நாம் வாழவேண்டும் என்பதற்காக தங்களையே அகுதியாக்கிக்கொண்ட அந்தத் தியாகச் செம்மல்களை, தமிழருக்கு அடையாளம் தந்த அந்த ஒப்பற்ற தலைவனை கண்முன்னே பறிகொடுத்துவிட்டு தமிழ் இனமே ஒன்றுகூடி ஓவென்று கதறி அழுத மாதம்.
இன்றைக்கு காசாவை- குறிப்பாக ரப்பாவையும் அங்கு பரிதவிக்கும் பலஸ்தீனர்களைப் பார்க்கின்றபோது, 2009ம் ஆண்டு தமிழர்கள் சந்தித்த அந்த வலிசுமந்த மே மாதத்தின் கொடூரமான காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன....
அவுஸ்திரேலியாவில் நடைபயிற்சியில் சென்று கொண்டிருந்த பெண் அமைச்சரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து தகாத நிலைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட 37 வயது பெண்மணி பிரிட்டானி லாவ்கா(Brittany Lauga).இவர் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை துணை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.இரவு நேரத்தில் நடை பயிற்சி சென்றவேளைஇந்நிலையில் இரவு நேரத்த...
எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
அந்த அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே(Ismail Haniyeh), கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய தலைவர்களுக்கு இந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆய்வு செய்யும் இஸ்ரேல்இதேவேள...
ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ள நிலையில் பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ள ரபா மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
கிழக்கு ரஃபாவில் ஹமாஸுக்கு எதிராக இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்துவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் பற்றிய மேலதிக விவரங்களை விரைவில் தருவதாக படைத்தரப்பு உறுதியளித்துள்ளது...
கனடாவில் (Canada) ஒரு மாகாணத்தில் இருந்து மற்றுமொரு மாகாணத்துக்கு குடிபெயர்பவர்கள் ஐ.ஈ.எல்.டி.எஸ் (IELTS) எனப்படும் ஆங்கிலப் பரீட்சை செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee Program) ஊடாக குடிபெயர்பவர்களுக்கு மாத்திரம் குறித்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், எக்ஸ்பிரஸ் நுழைவு (Express Entry) மூலம் வி...
கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஷௌர்யா என்ற 11 வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.
குறித்த சிறுவன் பந்து வீசிய நிலையில் குறித்த சிறுவன் பந்து வீசிய நிலையில் துடுப்பாட்ட வீரர் பந்தை நேரடியாக அவரை நோக்கி அடித்துள்ளார்.
இதில் ஷௌர்யாவின்...
கனேடிய தபால் திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதன்படி இதுவரையில் தபால் திணைக்களம் அடைந்துள்ள மொத்த நட்டம் மூன்று பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில்,ஓராண்டு காலப்பகுதிக்குள் நிதிப் பற்றாக்குறை நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முத்திரைகளின் கட்டணங்கள் கனேடிய தபால் திணைக்களம் கடந்த 2023ம் ஆண்டில் 748 மில்லியன் டொலர் நட்டத்தை எதிர்நோக...
பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடுகளுக்கும் வறுமையில் இருக்கும் நாடுகளுக்கும் தானாக முன்வந்து உதவி செய்து அவர்களை தன்னுடைய கடன்காரர்களாக மாற்றும் வழிமுறையை சீனா (China) காலம் காலமாக பின்பற்றி வருகிறது.
வெளிநாடுகளுக்கு சீனா வழங்கியுள்ள கடன்களில் 44 % ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 2012 ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளுக்கு சீனா வழங்கிய கடனின் மதிப்பு 6.4 மில்லியன் டொலர்களாக இருந்து 2022 ஆம் ஆண்டில் 42.9 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது, இதில் மூன்றில் இரண்டு பகுதி க...
நேட்டோவின் (NATO) 32 உறுப்பு நாடுகளின் மொத்த ஆயுத உற்பத்தியை விட இந்த ஆண்டு (2024) அதிக பீரங்கிகளை ரஷ்யா (Russia) உற்பத்தி செய்யும் என்று அமெரிக்கா (America) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024இல் ரஷ்யா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை ராணுவத்திற்காக செலவிட உள்ளது என்று ஸ்டொக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகமும் (International Stockhome peace Club) கூறியுள்ளது.ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இன்று (06) இரண்டு பேருந்துகள் மீது உக்ரேனிய (Ukraine) ஆளில்லா விமானம் நடத...
காசா(Gaza) போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல்(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் மற்றும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாததுடன் சமீபத்தில் கெய்ரோவில்(Cairo) நடந்த பேச்சுவார்த்தை நேற்று(05) நிறைவட...
இஸ்ரேல்(Israel) தொடர்பில் குறிப்பிடுகின்ற போது சில தரப்புக்கள் சீயோனிச இஸ்ரேல் என்றும் யூதர்கள் பற்றி குறிப்பிடுகின்ற போது அவர்களை சிலர் சீயோனிஸ்டுகள்(Zionist) என்றும் குறிப்பிட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக சில முஸ்லீம்கள்(Muslims) சீயோனிசம் என்ற பதத்தை பிரயோகிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதனை மிகுந்த கோபத்துடனும் வெறுப்புடனும் சில சந்தர்ப்பங்களில் அச்சத்துடனும் உச்சரிக்கின்றனர்.
மனிதர்களில் ஒரு தரப்பை கோபப்படுத்துகின்ற வெறுப்பை காரி உமிழ வைக்கின்ற சீயோனிசம் என்றால் என்ன?...
உலகில் உள்ள பல நாடுகளில் லித்தியத்தை தோண்டி எடுப்பதில் சீனா (China)அதிக முயற்சி எடுப்பது மாத்திரமல்லாமல் அதிகளவு பங்குகளையும் கொள்வனவு செய்து வைத்து, வெள்ளை தங்க வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்தவகையில், லித்தியம் மற்றும் கோபால்ட்டை சுத்திகரிப்பதில் சீனா நீண்ட காலமாகவே முன்னணியில் இருந்து வருகிறது, அதன்படி, 2022இல் உலக விநியோகத்தில் முறையே 72% மற்றும் 68% பங்குகளை அது கொண்டிருந்தது.இந்த வெள்ளைத்தங்க வேட்டையில் சீனா ஈடுபடுவதற்கான காரணம் மற்றும், உலகளவில் லி...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் முதன்முறையாக அயோத்தி(Ayodhya)செல்கிறார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா(India) முழுவதும், மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு 26 ஆம் திகதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் 7 ஆம் திகதி 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவ...
இலங்கையில் வசிக்கவும் தொழில் செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிட விசாவை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பெற முடியுமென குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஸ இலுக்பிட்டிய(Harsha Ilukpitiya) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த திட்டத்துக்கான விதிமுறைகள் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் விரைவில் திட்டம் செயற்படுத்தப்படுவதற்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்றதன் பின்னர் குடியுரிமை நிறுத்தப்பட்...
அமெரிக்காவில்(America) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு லொட்டரியொன்றில் அமெரிக்க டொலர் மதிப்பில் 1.3 பில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.
லாவோஸ்(Laos) நாட்டை சேர்ந்த செங்சைபன்(46) என்ற நபர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.வாழ்வின் இறுதி கட்டம்
குறித்த நபர் கடந்த 8 வருடங்களாக சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாலும், வாழ்வின் இறுதி கட்டங்களை எண்ணிக் கொண்டு இருந்துள்ளார்.
இந...
இந்தியாவிலிருந்து(India) இலங்கைக்கு(Sri Lanka) கடத்தவிருந்த 11.88 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவரை காவல்துறையினர் திருப்புலானி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது, நேற்றையதினம்(04) ) இரவு பெரியபட்டினம் கடற்கரை அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெரியபட்டினம் கடற்கரை அருகே தனியார் வாகனமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மா...
ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா அரிய
ஊதா நிற கல் போன்ற ஒரு பொருளை இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் ரோமானிய காலகட்டத்தைச் சேர்ந்த குளியல் அறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது குறித்த அபூர்வ ஊதா நிறப் பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானிய நிலவியல் அமைப்புடன் இணைந்து பல்வேறு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், அந்தப் பொருள், டைரியன் ஊதா (Tyrian Purple) என கண்டறியப்பட்டுள்...
கனடாவின் டர்ஹாம்(Durham) பிராந்தியத்தில் முதியவர்களை குறி வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து இரு தமிழர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதிலும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு தமிழர்கள் கைதுஇந்த மோசடி தொடர்பில் Ajax நகரை சேர்ந்த லக்சாந்த் செல்வராஜா (வயது 27) மற்றும் 25 வயதான அக்சயா த...
வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வானது, பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (Boston Consulting Group) என்ற அமெரிக்க நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 2018 - 2023 ஆண்டு வரையில் 78 சதவீதத்தில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புவோரின் எண்ணிக்கை 54 சதவீதமாக வீழச்சியடைந்துள்ளது.காரணம்
இந்நிலையில், வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டாதவர்கள் தாய்நாட்டின் மீதுள்ள உணர்வினால் வெளி...
ரஷ்ய எல்லைகளில் தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தலாம் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன்(David cameron) தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை(16) உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்த அவர், சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் விளோடிமீர் ஜெலன்ஸ்கியுடன்(volodymyr zelensky) கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன், போரில் உக்ரைனுக்கு உதவியளிக்கும் ...
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தள்ள அமெரிக்க கல்லூரி வளாகங்களில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைள் 2,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரி வளாகங்களில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை இரவு முதல் வியாழன் பகல் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறையினரின் நடவடிக்கை
இந்நிலையில், கைதானவர்களின் எண்ணிக்கை 2000 கடந்துள்ளதாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட...
கென்யாவில்(kenya) கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170 ஐ தாண்டியது.கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழையால் தலைநகர் நைரோபி உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இந்நிலையில்,வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மட்டுமின்றி, கட்டிட இடிபாடுகளிலும் சிக்கி 120 பேர் உயிரிழந்தனர்.மீட்கும் பணி அத்துடன் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) பல்வேறு இடங்களில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு இலங்கைத் தூதரகத்திற்கு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இலங்கையர்களுக்கு இந்த பொது மன்னிப்பானது ஐக்கிய அரபு அமீரக அரச மன்னிப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.பொது மன்னிப்பு புனித ரமழான் மாதத்த...
அமெரிக்காவில் பாடசாலைக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவன் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.இச்சம்பவமானது அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.மேலதிக விசாரணைசம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பாடசாலைக்கு குறித்த மாணவன் துப்பாக்கியுடன் வந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அந்த மாணவன் பாடசாலைக்குள் நுழைவதற்குள் துப...