லண்டனிற்கு படிக்க சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மீண்டும் இந்தியா திரும்பியதும் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழக பாஜக தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர வாய்ப்பாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியமான ஏற்பாட்டில் களமிறங்கியுள்ளது. இதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் டூல் பல்வேறு விதங்களில் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ள தூத்துக்குடி நடுவன் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Territorial Army Recruitment 2024 : மத்திய அரசின் பிராந்திய இராணுவத்தின் கீழ் தென் இந்தியாவில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பிராந்திய இராணுவ படை என்றால் என்ன மற்றும் இதில் கலந்துகொள்ள தேவையான தகுதிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?. தவெக மாநாட்டுக்கு கர்ப்பிணிகள், வயதானவர்கள் வர வேண்டாம் என கூறியது அக்கறையில் சொன்னது, அதை வரவேற்கிறேன். விஜய்க்கு என் பாராட்டுக்கள் என கரூரில் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு கான அனைத்து தொழிற்சங்களின் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
ததபால் நிலையங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வழங்கி வருகின்றன. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் சேமிக்க விரும்புவர்களுக்காக உள்ள சூப்பரான திட்டம் ஒன்று குறித்து விரிவாக பார்க்கலாம்.
Madurai District Health Society Jobs 2024 : பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி கார் மற்றும் சொந்த வாகனங்களில் சொந்த ஊருக்கு செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் அவுட்டர் ரிங் ரோடு வழியாக செல்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது அதனால் எப்போது வேண்டுமானாலும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்பதினால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்கால் பகுதியிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருவதற்கு பத்து நாட்கள் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது ஏராளமானோர் பட்டாசு வாங்க குவிந்து வருகின்றனர் என பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் 8 வீட்டில் இருக்கும் சவுந்தர்யாவுக்கு யார் தான் ஓட்டு போடுகிறார்கள் என்பது எனக்கு தெரிந்தே ஆகணும் என நடிகை சனம் ஷெட்டி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எதுவும் செய்யாத சவுந்தர்யாவுக்கு எப்படி ஓட்டு வருகிறது என கேட்டிருக்கிறார்.