ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பைக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது குஜராத் அணி.
இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடரை 2012 - 13-க்குப் பிறகு ஆடவே இல்லை. இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே சந்திக்கின்றன. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன்கள்வித்தியாசத்தில் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிஎஸ்கேவின் பேட்டிங்கில் ஷிவம் துபே 23 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணிகள் விளையாடின. இதில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தி இருந்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியானது. அதன்படி, மே 26ம் தேதி சென்னையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி 20 தொடரில் நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
உள்ளூர் கிரிக்கெட் வட்டாரத்தில் அசத்தல் ஆல்ரவுண்டராக அறியப்படுபவர் ரமன்தீப் சிங். லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர். பஞ்சாப் அணிக்காக ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்திறனை வெளிப்படுத்தும் வீரர். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோஷின் கான். இடது கை வேகப்பந்து வீச்சாளர். 25 வயதான இவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்த சீசன் முழுவதும் லக்னோ அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்நிலையில், வெற்றிக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்தது..
"ரோகித் சர்மா இன்னும் இந்தியாவின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனை மறக்கக் கூடாது." என்று மும்பை அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 4 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியிருந்தது. ஆனால் கடைசி 3 சீசன்களிலும் அந்த அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. 2021, 2022-ம் ஆண்டு சீசனில் 8-வது இடத்தை பிடித்த ஹைதராபாத் அணி கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஏலம் எக்கப்பட்ட வீரர் என்றால் அது மிட்செல் ஸ்டார்க்தான். ஆனால் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்றிருந்தால் அதற்குக் காரணமானவரும் அவராகவே இருந்திருப்பார்
அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள ஐபிஎல் 2024 சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ள வீரர்தான் ஷுபம் துபே. உள்ளூர் கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேன். அவரை ரூ.5.8 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 187 என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 17-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் நேற்று முன்தினம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேம் கரணின் அதிரடி பேட்டிங்கால் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
"ரஞ்சி டிராபி கிரிக்கெட்டை நோக்கி இளம் வீரர்களை ஈர்க்க வேண்டுமெனில் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். ஒப்பந்த முறை கொண்டு வரப்பட வேண்டும். ஊக்கத்தொகை அறிவிக்கப்பட வேண்டும்" என்று முன்னாள் இந்திய நட்சத்திரம் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ-யை வலியுறுத்தியுள்ளார்.