அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அது நமது ஜனநாயக கடமை. நாம் ஓட்டு போடுவதோடு, அனைவரையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். இதனை உணர்ந்த ஒரு முதலமைச்சர், ட்ரைவரை வாக்களிக்க அனுப்பி விட்டு, காரை தானே ஓட்டிக் வந்து வாக்களித்துள்ளார்.
“இது சாதாரண தேர்தல் அல்ல. நமது நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார்.
Lok Sabha Elections: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு இந்த வசதியை பெறலாம்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று (ஏப். 19) முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தைரியம் ஜம்மு காஷ்மீரில் இன்று யாருக்கும் இல்லை என்றும், பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் யாரேனும் அதிகபட்சமாக பலன் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் பாஜகவை எதிர்த்து தாக்குர் சமூகத்தினர் பஞ்சாயத்துகளை நடத்தி வருகின்றனர். ‘சத்ரிய ஸ்வபிமான் பஞ்சாயத்து’ எனும் பெயரிலான இக்கூட்டங்கள், பாஜகவை கவலை அடையச் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கந்தோ கிராமத்தைச் சேர்ந்த மூன்று வாய்பேச முடியாத சகோதரிகள் இன்று முதல் முறையாக வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் அமனதுல்லா கான் (50). இவர் டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மதுக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் விரிவாக்கப்பட்ட அங்கம் (Wing) ஆக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் தேர்தெடுக்கப்பட்ட பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து, அதை சட்டவிரோதமானது என்று விவரித்தது. ஆனால் மோடி அதை நியாயப்படுத்த முயன்றார். அப்போது அவரின் கைகள் நடுங்கின” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட பதிவினை நீக்கும் முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது ஏன் என புதன்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த பிரச்சினைகள் அரசு தரப்பை தர்ம சங்கடத்துக்கு ஆழ்த்தியது தான் காரணமா என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
நாளை நடைபெற உள்ள தேர்தலில் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும், வாக்களிக்க 1 லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது.
ஈரான் ராவணுவத்தால் கடந்த வாரம் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் சரக்கு கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் ஒருவரான பெண் பணியாளர் ஆன் தேஸ்ஸா ஜோசப் இன்று (ஏப்.18) பாதுகாப்பாக கொச்சி திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.