மதுரவாயலில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் உதவி கேட்பது போல நடித்து, சில நிமிடங்களுக்குப்பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை மட்டுமில்லாமல் வாகன ஓட்டியிடமிருந்து அவரது பைக், மொபைல், செயின் ஆகியவற்றை திருடி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (30). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த வார சனிக்கிழமை (மார்ச் 2
அரியலூரில் பரிசு பொருள் பார்சல் வந்திருப்பதாகக் கூறி ரூ.12 லட்சம் இணைய மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது அம்மா ஜெயந்தியின் போனுக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலத்தில் பேசிய பெண் தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு உங்களு
ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். பொதுமக்களிடம் முதலீடாக ப
அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்த
தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சி
கோவையிலிருந்து சட்ட விரோதமாக கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவிலான கனிம வளங்கள் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் 80 சதவீதம் அனுமதி இன்றி சட்ட விரோதமாக ச
நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரதசாந்தி விழா இன்று நடைபெறுகிறதுமயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வய
நெல்லையில் வடமாநில இளைஞரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரை சினிமா பாணியில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.நெல்லை மேலப்பாளையம் அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கி குளிர்பானங்கள் விற்பனை செய்யும் பணியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவில் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்து கொண
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.நடிகர் யோகிபாபு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் தொடர்ந்து தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் இயக்குனர் சிம்பு தேவர் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, கன்னியாகுமரி மாவட்ட
மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் சமரசம் எட்டப்பட்டுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக தெர
மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் -
அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு அவருடைய சிலை, கோப்பை, கமாண்ட் ஆஃப் புட்பால் போன்ற கவுரங்களை வழங்கி சிறப்பித்திருக்கும் CONMEBOL, அதன் அருங்காட்சியகத்தில் பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் லியோனல் மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று மிகப்பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது.நடந்துமுடிந்த கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜெண்டினா 36 வருடங்கள் கழித்து வென்றதற்கான கொண்டாட்டங்கள் இன
வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை பெற்றவர்களை காட்டிலும் உடன் இருக்கும் தாத்தா பாட்டிகளே மிகவும் கவனமாகவும் கனிவாகவும் பராமரிப்பார்கள். ஆனால், பெண் ஒருவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை மாமியார் தொடக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார்.இப்படியெல்லாம் நடக்குமா என இதனை அறிந்த பிறகு நம்புவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. பெற்றோர்களுக்கான மம்ஸ்நெட் என்ற தளத்தில் பெண் ஒருவர் பகி
ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது. நிறையப்பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர். என்றாவது ஒரு நாள் அதிகநேரம் தூங்குவது உ
நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, சிரியா, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, அந்தமான் தீவு, இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர
அமெரிக்காவில் பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துச் சென்று உறவினர்களுக்கு சமைத்துக் கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். போதைப்பொருள் வழக்கில் சிக்கி அதற்காக 20 வருடங்கள் சிறை தண்டனையை பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் வெறும் 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட ல
பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது.பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அங்கு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 62ஆக உள்ளது. இதனை 64 ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முயன்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின்படி, 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக
சமீப காலமாக இயற்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் நம்மை மிரட்டி தான் வருகிறது. பனி உருகுதல், பூகம்பம், இப்படி பல நிகழ்வு நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, மிசோரம் மாநிலமானது, மழை மேகம் சூழ்ந்ததால், பகலியே இருளாக மாறிய அரிய நிகழ்வு நடந்துள்ளது.மிசோரம் மாநிலத்தில் வானிலை மாற்றம் காரணமாக பகல் நேரமானது, இரவு நேரம் போன்று மாறியதால் மக்கள் வியப்படைந்தனர். தலைநகர் Aizawlல் மதியம் ஒரு மணி அளவில் திடீரென கருமே
ஆஸ்திரேலியா தம்பதியினர் வாங்கிய இரண்டு லாட்டரியில் இருந்து ரூ. 16 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், 3 தலைமுறைகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகின்றனர். ஆனால், பரிசுத்தொகை விழுந்ததில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பெரிய பரிசுத் தொகை விழுந்திருக்கிறது. இந்த சுவையான சம்பவம் குறித்து அறிவோம்.மனைவி
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி, மூடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச்
ஸ்காட்லாந்தில், தன் இறந்த குழந்தையின் உடலை வாங்குவதற்கு ஒரு பெண் 48 வருடங்கள் போராடியிருப்பது உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவைச் சேர்ந்தவர் லிடியா ரீட். தற்போது 74 வயதாகும் இந்தப் பெண்மணி, கிட்டத்தட்ட 48 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறந்துபோன தன் மகனின் உடல் பாகங்களைப் பெற்றுள்ளார். லிடியா ரீட்டிற்கு, கடந்த 1975ஆம் ஆண்டு கேரி (Gary) என்ற ஆண் குழந்தை பிறந்
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என அமைச்சர் டக்ளஸ் யாழ்பாணத்தில் பேட்டியளித்தார்.இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் வடமராட்சி வடக்கு ம
கடந்த மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கு அரசியல்வாதிகளே காரணம் என விஞ்ஞானி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.துருக்கியில் கடந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், ஆண்டக்யா நகரமானது பெரும் அழிவை சந்தித்தது. இதனை துருக்கி அரசின் வான்வழிப் படங்கள் உறுதி செய்தன. அப்போது நிலநடுக்கத்தால் நகரின் மீதமுள்ள 80 சதவீத கட்டடங்கள் இடிக்கப்ப
பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா தனக்கென கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த பிறகும் கிசுகிசுக்களும், பரபரப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல்தான் இருக்கிறார்.ஆசிரமம் நடத்தி பாலியல் புகாரில் சிக்கி சிறைவாசம் பெற்ற நித்யானந்தா, வெளியே வந்த பிறகு இந்தியாவை விட்டு தப்பியோடி, இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக சொல்லிக் கொண்டு, அதற்கான தனிக்கொடி மற்றும் நாணயங்களை அறிவித்து சர்
இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர் மீன் பிடிக்க பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி: இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஆதேஸ் என்னும் ரோந்து கப்பலில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து சோதனையிட்டனர
குழந்தைகளின் தனியுரிமையை காக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசு முக்கியமான சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை அவர்களது பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதை தடுக்க வழி வகுப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைக்கும் வழிவகை செய்துள்ளது.இந்த மசோதாவை புரூனோ ஸ்டூடெர் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிந்தார். அதில், “பெற்றோருக்கான அதிகாரம் குறித்த
உக்ரைன் நகருக்குள் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஓராண்டை கடந்து முடியாத போர்!உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்தது. என்றாலும், இப்போதுவரை இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவு
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வாரத்தில் ஒருவேளை உணவை மட்டும் உட்கொண்டாலும், தாம் வளர்க்கும் பூனைகளைப் பட்டினி கிடக்க விடாமால் வளர்த்து வருகிறார்.வடக்கு லண்டனைச் சேர்ந்தவர் யாஸ்மென் கப்டன். 46 வயதான இந்தப் பெண்மணி, தன்னுடைய ஆறு பூனைகள் உணவு சாப்பிடுவதற்காக, ஒருவருடமாக இருவேளை உணவைத் தவிர்த்து வருவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு வரை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த
30 வயதான அமெரிக்க டிக்டாக் பிரபலம் ஒருவர் தொடர்ச்சியான ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டுவந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.தலையில் துடிப்பு அல்லது படபடப்பான ஒரு வலி உருவாவதை ஒற்றை தலைவலி என வரையறுக்கிறது தேசிய நரம்பியல் கோளாறு மற்றும் பக்கவாத நிறுவனம். இது மூளையில் மரபணு மாற்றங்களால் ஏற்படும் அடிப்படை நரம்பியல் அசாதாரணங்களால் உருவாகும் ஒரு பிரச்னை. பிரகாசமான வெளிச்சம், பல்வேறு வண்ணங்களை தெளிவாக பார
பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் 6.8 என்கிற ரிக்டர் அளவில்