பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த மேற்கு வங்கத்தில், பாஜக - திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையிலான மோதலில் கல்வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 44.08 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 32.31 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
“பிரதமர் மோடியின் பண பலம், அதிகாரத்துக்கும், ராகுல் காந்தியின் மக்கள் சக்திக்கும் இடையே நடைபெறும் மக்களவைத் தேர்தல்” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றியவர்களில் இதுவரை காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பிவிட்டனர். மேலும், இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்பகல் 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
“வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான சிவகார்த்திகேயன் புராடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் பெயர் குரங்கு பெடல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மதுபானக் கடை மற்றும் வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமல்கண்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இண்டியா கூட்டணிக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறும்” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
தமிழகத்தில் மட்டும்தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது. பிற மாநிலங்களில் இந்த பழக்கமில்லை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதேநேரம் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில் சி.வி.சண்முகம் எம்.பி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர்,“மக்களுக்காக பாடுபடுகின்றவர்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.
“இது சாதாரண தேர்தல் அல்ல. நமது நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் முற்றிலும் பெண் அலுவலர்களே பணிபுரியும் ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியகுளம்
வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸா ருக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்தது. மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தலைமை வகித்து பேசியதாவது
வாக்குச் சாவடிகளுக்கு அருகே அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும், முதலுதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்
நாட்டில் இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகும் தேர்தலாகும்.