செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் சேவையை 2 மாதங்களுக்கு நீட்டித்து தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. செகந்திராபாத்-ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவை
தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் கோடை வெயிலில் மக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல பகல்வேளையில் தினமும் லாரிகள் மூலம் நகர் சாலைகளில் தண்ணீரை ஊற்றி குளிர்விப்பது வரவேற்பை பெற்றுள்ளது
விழுப்புரம் மகாராஜபுரம் அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து பாழாகி வருகிறது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில், அரசு வீட்டுவசதி வாரியம் கட்டுப்பாட்டின் கீழ் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வீடுகள்
ஊசுடு அருகே சேதராப்பட்டு-, கரசூர் பகுதிகளில் 749 ஏக்கர் விவசாய மற்றும் தரிசு நிலங்கள், கடந்த 2006-2007- ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமி ஆட்சியின்போது கையகப்படுத்தப்பட்டு, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது
திரைப்படங்களில் ‘ஆண்டிப் பண்டாரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கலாதேவி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரூ.26 கோடி மதிப்பில் நடைபெற்ற மதகுகள் சீரமைப்பு பணி நிறைவடைந்தது. இதையடுத்து, பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்
பேராசிரியை நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளை தவறாகப் பயன்படுத்தத் திட்டமிட்டார் என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதாக அளிக்கப்படும் புகார் தொடர்பாக மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஆய்வு செய்யப்படும் என தேர்தல் துறை அதிகாரி தெரிவித்தார்
கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மா மரங்களைக் காக்க,லாரிகள் மூலம் தண்ணீர் வசதிஏற்படுத்திக் கொடுத்து, மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்
2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது
பணி ஓய்வு பெறவுள்ளநீதிபதி ஜி. சந்திரசேகரன் 4ஆண்டுகளுக்கும் குறைவானகாலமே பணியாற்றியுள்ளார் என்றாலும் 17 ஆயிரத்துக்கும்மேற்பட்ட வழக்குகளை முடித்துவைத்துள்ளார் என்றார்.
அண்மை காலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், காவல் துறை, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்பு துறை, ராணுவம் போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.
காலை 11 முதல் மாலை 3.30 மணிவரை மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னைமாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த 2002-ம் ஆண்டு வரை தென்மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு பிராட்வேயில் இருந்துதான் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
கால் முட்டி சவ்வு பாதிக்கப்பட்ட ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு, அவரது தாயின் காலில் இருந்து சவ்வு பெறப்பட்டு வெற்றிகரமாக வைக்கப்பட்டது. சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
மே தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உழைப்பாளர்களின் உழைப்பை போற்றி, உரிமைகளை பாதுகாக்க உறுதியெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளர் (பார்மசிஸ்ட்) இல்லாததால் மாத்திரை வாங்க வந்த முதியோர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூன் 1-ல் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்தவாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.