மணிப்பூரில் நாளை 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான ஆதிஷி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இரண்டு கட்ட வாக்களிப்பு முடிவுற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸின் சொத்து மறுபங்கீடு வாக்குறுதி முதல் ராகுலின் எக்ஸ்ரே விமர்சனம் வரை பல்வேறு சர்ச்சைகள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல் நேரத்தில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரதேச தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
மும்பை தாக்குதல் வழக்கில் அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிகம் பாஜக சார்பில், மும்பை வட மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் நேற்று வெளியிட்டது.
பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதால், பிஜூஜனதா தளம் உட்பட பலகட்சிகளில் இருந்து தலைவர்கள், தொண்டர்கள் பாஜக.,வில் இணைகின்றனர் என மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்கி, 6 மாதங்கள் விழித்திருந்தார். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டியோ மக்களுக்கு எதுவுமே செய்யாமல் கடந்த 5 ஆண்டுகள் தூக்கத்திலேயே இருந்துள்ளார் என ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடிகூட்டணி ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தாததால் அதிருப்தி அடைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பீமேதாரா மாவட்டத்தில் ஞாயிறு பின்னிரவில் சரக்கு வாகனம் ஒன்று லாரியுடன் மோதியதில் 3 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். கத்தியா கிராமம் அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது.
டெல்லியில் உள்ள 50க்கும் அதிகமான பள்ளிகள் மற்றும் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று (புதன்கிழமை) மின்னஞ்சலில் மிரட்டல் வந்தததைத் தொடர்ந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். நொய்டா டிஎஸ்பிக்கும் இது போன்ற மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.
முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு, “இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா?... எனக்கு கூடதான் 5 குழந்தைகள்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 60-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அப்பள்ளிகளில் போலீஸார் நடத்திய தீவிரமான சோதனையில், இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் சுமன் நல்வா தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார் தொடர்பாக ஹசன் எம்.பி., பிரஜ்வால் ரேவண்ணா உட்பட யாரையும் காப்பாற்றுவது என்ற கேள்விக்கே இடம் இல்லை. சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா இன்று தெரிவித்தார்.
உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கான விடை 24 மணிநேரத்தில் தெரிந்துவிடும் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
“பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?” என பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் சம்மனுக்கு பதில் அளித்துள்ளார்.
நாட்டில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டுள்ளது. 70 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தற்காலிக தடை இன்று (மே 1) இரவு 8 மணி முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பழங்குடியின, பட்டியலின மற்றும் ஓபிசி மக்களுக்கு அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, அதை யாரும் பறிக்க முடியாது. மோடி உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் தேசிய புறநகர் மண்டலத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பிஹார் ராஜ்பவனுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த இ-மெயில் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாக டெல்லி போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மார்பிங் வீடியோ வழக்கு தொடர்பாக, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தரப்பு வழக்கறிஞர் நேற்று டெல்லி போலீஸார் முன்பு ஆஜராகி, ‘அந்த வீடியோ வெளியானது ரேவந்த் ரெட்டிக்கு சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் இருந்து அல்ல என்று விளக்கம் அளித்தார்
“வட மற்றும் தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு பாகுபாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் அறிவார்ந்த தலைமை தேவை” என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
செல்போன் செயலியில் செய்யப்பட்டு வந்த மோசடி முதலீட்டுத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த சோதனை நடந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்தமுறை மக்களவைத் தேர்தலில் உ.பி.யிலிருந்து இதுவரை 13 எம்எல்ஏக்கள் போட்டியிடுகின்றனர். வரும் நாட்களில் மேலும் சிலரது போட்டியால் பெரிய அளவில் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது.