கீர்த்தி சுரேஷ் நடித்து அடுத்து வெளியாக இருக்கும் படம், ‘ரிவால்வர் ரீட்டா’. இதில் சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, பிளேடு சங்கர் உட்பட பலர்நடித்துள்ளனர்.
“இங்கே ஃபேவரைட்டிசம் கூட ஒரு தகுதியாக மாறியுள்ளது. இந்த தகுதியை வளர்த்துக் கொண்டால் எனக்கான வாய்ப்புகள் கிடைக்கும்” என நடிகை பரினீதி சோப்ரா தெரவித்துள்ளார்.
“அடுத்த 5 ஆண்டுகளுக்கு மலையாளத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்து பாக்க முடியுமோ அனைத்தையும் செய்துவிடுங்கள். திரையுலகமும், பார்வையாளர்களும் அதற்கு தயாராக உள்ளனர். நல்ல சினிமாக்களை உருவாக்க வேண்டும்” என நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்வில் நடிகர் மம்மூட்டிக்கு, மோகன்லால் அன்பு முத்தத்தை பரிசளித்தார். அத்துடன் ‘ஜவான்’ படத்தின் பாடல் ஒன்றுக்கும் நடனமாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எர்ணாகுளம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள் மீது மரடு பகுதி காவல்து றையினர் புதன்கிழமை மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இயக்குநர் ஹரியின் ‘ரத்னம்’ திரைப்படம் இம்மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கான புரமோஷனை தேர்தல் பிரச்சார பாணியில் மேற்கொண்டுள்ளார் இயக்குநர் ஹரி.
கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்ற ‘குரங்கு பெடல்’ திரைப்படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவான ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள வரவற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், விஜயை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
“அனைத்து சமூக மக்களும் வேலைசெய்தால் தான் திரைப்படம் எடுக்க முடியும். அனைவரும் பார்த்தால்தான் வெற்றி பெற முடியும். சினிமா என்பது சாதி, மதம், மொழி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. எந்த ஒரு இயக்குநரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை” என இயக்குநர் ஹரி தெரிவித்தார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் ஜெயம் ரவி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் “எந்த உதவியானாலும் செய்து தருவேன்” என உறுதியளித்துள்ளார்.